INDKUW [Image Source : Twitter/@IndianFootball]
இந்தியா மற்றும் குவைத் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இந்த ஆண்டிற்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டி (SAFF) பெங்களூரில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் குவைத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் இரு அணி தரப்பிலும் ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டது.
இதனால் போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. போட்டி தொடங்கிய பாதி நேரத்தில் இந்திய அணியில் சுனில் சேத்ரி, ஒரு கோல் ஐந்து அணியை முன்னிலைக்குக் கொண்டுவந்தார். சுனில் சேத்ரியின் கோலினால் ஆட்டத்தின் இரண்டாவது பாதி வரை இந்தியா முன்னிலையில் இருந்தது.
இதன்பின், குவைத் அணியில் அப்துல்லா அல்புளூஷி அடித்த பந்து கிராஸ் அன்வர் அலியின் காலில் மோதி கோலாக மாறியது. 90 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்த போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்தது. மேலும், இதுவரை நடந்த போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக கோல் அடித்த முதல் அணி குவைத் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி, தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தற்பொழுது, குவைத் அணியும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…