INDKUW [Image Source : Twitter/@IndianFootball]
இந்தியா மற்றும் குவைத் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இந்த ஆண்டிற்கான தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் லீக் போட்டி (SAFF) பெங்களூரில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் குவைத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் இரு அணி தரப்பிலும் ஒரு கோல் மட்டுமே அடிக்கப்பட்டது.
இதனால் போட்டியானது 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. போட்டி தொடங்கிய பாதி நேரத்தில் இந்திய அணியில் சுனில் சேத்ரி, ஒரு கோல் ஐந்து அணியை முன்னிலைக்குக் கொண்டுவந்தார். சுனில் சேத்ரியின் கோலினால் ஆட்டத்தின் இரண்டாவது பாதி வரை இந்தியா முன்னிலையில் இருந்தது.
இதன்பின், குவைத் அணியில் அப்துல்லா அல்புளூஷி அடித்த பந்து கிராஸ் அன்வர் அலியின் காலில் மோதி கோலாக மாறியது. 90 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்த போட்டியில் இரு அணிகளும் ஒரு கோல் அடித்தது. மேலும், இதுவரை நடந்த போட்டிகளில் இந்திய அணிக்கு எதிராக கோல் அடித்த முதல் அணி குவைத் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் நேபாளத்தை வீழ்த்தி, தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. தற்பொழுது, குவைத் அணியும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…
குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 17-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை…