டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா,அங்கிதா ரெய்னா இணை முதல் சுற்றிலேயே தோல்வியுற்றுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் நேற்று முன்தினம் அதிகாரப்பூா்வமாகத் தொடங்கி,நேற்று முதல் பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,நேற்று நடைபெற்ற மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றார்.டேபிள் டென்னிஸில், மகளிர் ஒற்றையர் பிரிவில், மாணிக்க பத்ரா மற்றும் சுதிர்தா முகர்ஜி இருவரும் வெற்றிகளைப் பதிவு செய்தனர்.
முன்னேற்றம்:
மேலும்,இன்று நடைபெற்ற பேட்மிண்டன் மகளிர் பிரிவின் தனிபர் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பிவி சிந்து,இஸ்ரேலின் போலிகர்போவை 21-7 ,21-10 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
தோல்வி:
இந்நிலையில்,ஒலிம்பிக்கில் இன்று நடந்த மகளிர் இரட்டையர் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா-அங்கிதா ரெய்னா அணி உக்ரைன் இரட்டை சகோதரிகளான நதியா மற்றும் லியுட்மிலா கிச்செனோ இரட்டையர்களிடம் மோதியது.
இந்த ஆட்டத்தில் சானியா மிர்சா அணி முதல் செட்டில் ஒரு சிறந்த செயல்திறனைக் காட்டிய போதிலும்,இறுதியில் 6-0, 6-7, 8-10 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘உண்மையான’. சுவாரஸ்யமாக என்னவென்றால், மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியா இதுவரை ஒரு போட்டியில்கூட வெற்றி பெற்று முதல் சுற்றைக் கடந்ததில்லை.இதனால்,சானியா மிர்சா இணை மீண்டும் ஒரு பெரிய வாய்ப்பை இழந்தனர்.
இதற்கு முன்னதாக,2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக்கின் முதல் சுற்றில், சானியா மற்றும் சுனிதா ராவ் இணை, பிரான்சின் கோலோவின் மற்றும் பார்மென்டியரிடம் தோல்வியுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…