SAFF Championship [Image- Twitter/@IndianFootballteam & 90ndstoppage]
தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் சாம்பியன்ஷிப் 2023 தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன.
தெற்காசிய கால்பந்து சம்மேளனம்(SAFF) சாம்பியன்ஷிப் 2023, தொடரில் அங்கத்தின் அனைத்து உறுப்பு நாடுகளான வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், லெபனான் மற்றும் குவைத் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றன. எட்டு முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற இந்தியா இந்த தொடரை நடத்துகிறது.
SAFF சாம்பியன்ஷிப்பிற்காக, அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ரவுண்ட்-ராபின் போட்டிகளில் போட்டியிடும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். மே 17 ஆம் தேதி இன்று தொடங்குவதாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில், போட்டி நடைபெறும் இடமாக பெங்களூருவை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு(AIFF) அறிவித்துள்ளது.
பிரிவு-A: இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான்
பிரிவு-B: லெபனான், மாலத்தீவுகள், வங்கதேசம், பூடான்
நடப்பு சாம்பியனான இந்தியா தனது வரலாற்றில் நான்காவது முறையாக SAFF சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக மாலத்தீவுகள் இரண்டு முறை இந்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…