TeamBharat: “இனி இந்திய அணி இல்லை, பாரத் அணி – வீரேந்தர் சேவாக் X தளத்தில் பதிவு!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தாண்டு ஜி20 கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் இந்தியா தலைமையின் கீழ் நடைபெற உள்ளது. இதன் ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது. அதன்படி, உச்சி மாநாடு தொடங்கும் 9-ம் தேதி இரவு விருந்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்க இருக்கிறார்.

இந்த சமயத்தில், இந்திய குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ ஜி20 கூட்டத்தின் சிறப்பு விருந்து அழைப்பிதழ்கள் இன்று காலை முதல் பல்வேறு துறையை சேர்ந்தவர்களுக்கு அனுப்பப்பட்டது. இதற்கு முன் பொதுவாக அரசு அதிகாரப்பூர்வ அழைப்பிதழ்களில் இந்தியா என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஆனால், இன்று வெளியான குடியரசு தலைவரின் அதிகாரப்பூர்வ ஜி20 கூட்டத்தின் சிறப்பு விருந்து அழைப்பிதழ்களில் ‘இந்திய குடியரசு தலைவர்’ என்பதற்கு பதிலாக ‘பிரசிடெண்ட் ஆஃப் பாரத்’ என்ற பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டது. இது மக்கள் மத்தியில் பெரிய அளவிலான விவாதத்தை உருவாக்கி உள்ளது.

இந்த, புதிய மாற்றம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவிற்கு பதில் பாரத் என்ற பெயர் மாற்றத்துக்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பலரும் விமர்சித்தும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், மறுபக்கம் பெயர் மாற்றத்துக்கு பாஜகவினர் உள்ளிட்ட சிலர் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் பெயர் மாற்றம் குறித்து தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், இனி இந்திய அணி இல்லை, பாரத் அணி. இந்த உலகக்கோப்பை தொடரில் கோலி, ரோஹித், பும்ரா, ஜடேஜா ஆகியோரை உற்சாகப்படுத்தும் அதே நேரத்தில், பாரதத்தை நம் மனதில் வைப்போம். இந்திய அணி வீரர்கள் ஜெர்சியில் பாரத் இடம்பெறட்டும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக சமூகவலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

8 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

9 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

9 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

10 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

10 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

11 hours ago