டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலேயே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கின் ஆண்கள் ஈட்டி எறிதல் தகுதி சுற்றுப் போட்டிகள் இன்று காலை நடைபெற்றது.இதில்,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா முதல் முயற்சியிலேயே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். ஏனெனில், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற 83.50 மீ ஈட்டி எறிந்தால் போதும்,ஆனால் ,நீரஜ் தனது முதல் முயற்சியிலேயே 86.65 மீட்டர் தூரத்தில் ஈட்டியை எறிந்து குரூப் ஏ பிரிவில் முதலிடம் பிடித்து சாதனைப் புரிந்துள்ளார்.அதன்படி, இறுதிப்போட்டி, வரும் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.
அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்பது இதுவே முதல் முறை,இருப்பினும்,தனது சிறப்பான முயற்சியின் மூலம் நீரஜ் சோப்ரா,இறுதி போட்டிக்கு முன்னேறி இந்தியாவுக்கு பதக்கத்தைப் பெற்று கொடுக்கும் வாய்ப்பை தக்க வைத்துள்ளார். மேலும்,ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில்,இந்திய வீரர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.
நீரஜ் சோப்ரா:
இவர் இந்திய இராணுவத்தில் ஜூனியர் கமிஷன்ட் அதிகாரி (JCO) ஆவார்.நீரஜ் 2016 உலக U-20 சாம்பியன்ஷிப் போட்டிகளில் 86.48 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து உலக சாதனை படைத்தார். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கான தொடக்க விழாவில் சோப்ரா கொடியைத் தாங்கியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.பின்னர்,ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் ஈட்டி எறிதலில் 88.06 மீ தூரத்திற்கு எறிந்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இவர் டோக்கியோ ஒலிம்பிக் தகுதி போட்டியில் 87.86 மீ தூரத்திற்கு ஈட்டி எறிந்து தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிவ்பால் சிங்:
அதேப் போல,ஒலிம்பிக் ஈட்டி எறிதல் தகுதிப் போட்டியின் பி பிரிவில் இந்தியாவின் ஷிவ்பால் சிங் தனது முதல் இரண்டு வீசுதல்களில், அவர் 76.40 மீ மற்றும் 74.80 மீ பதிவு செய்தார்.மூன்றாவது முயற்சியில் 74.81 மீ எறிந்தார்.இதனால்,12 வது இடத்தை பெற்று அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியவில்லை.
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…