வினேஷ் போகத் விவகாரம் : வெள்ளிப்பதக்கம் கிடைக்க வாய்ப்பா? மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பு..!

Published by
அகில் R

பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் ஒலிம்பிக் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் மகளீருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் போகத் பங்கேற்று விளையாடினார். மேலும், முதல் சுற்றில் இருந்து அதிரடியாக விளையாடிய வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

கடைசி நேரத்தில் இறுதி போட்டிக்கு முன் உடல் பரிசோதனையில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் ஒலிம்பிக் கமிட்டியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  இதனால், தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கமாவது கிடைக்குமென ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் மகிழ்ச்சியில் இருந்து வந்தனர்.

இந்நிலையில், அவர் தகுதி நீக்கம் குறித்த செய்தியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறுதி போட்டிக்காக தனது எடையை குறைப்பதற்காக அன்றைய இரவு முழுவதும் சாப்பிடாமல், தூங்காமல் உடல் எடையை 1.89 கிட்டத்தட்ட 2 கிலோ அளவில் தனது எடையை குறைத்தும் 100 கிராம் எடை கூடியதன் காரணமாக ஒலிம்பிக் கமிட்டியால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க வீராங்கனை சாரா ஹில்டெப்ராண்ட்டை எதிர்த்து கியூபா வீராங்கனையான யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபஸ் விளையாடினார். இந்த கியூபா வீராங்கனையை தான் நம் வீராங்கனை வினேஷ் போகத் அரையிறுதியில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இறுதி போட்டியில் அமெரிக்க வீராங்கனை 3-0 என்ற கணக்கில் தஙகம் வென்று அசத்தினார். மேலும், அந்த  போட்டியில் தோல்வியடைந்த கியூபா வீராங்கனைக்கு வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டது. ஆனால், இறுதிப் போட்டி முடிந்த போதிலும் தனது தகுதிநீக்கத்திற்கு எதிராக வினேஷ் போகத் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் (CAS) மேல்முறையீடு செய்துள்ளார்.

அதில் கியூபா நாடு வீராங்கனையுடன் வெள்ளிப் பதக்கத்தை பகிர்ந்து கொள்ள கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பான விசாரணை இன்று காலை நடைபெறும் என்றும் அதற்கான இடைக்கால தீர்ப்பும் வெளியாகும் என தெரியவந்துள்ளது. இதற்கிடையில் இன்று காலை வினேஷ் போகத் மல்யுத்த போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது எக்ஸ் தளத்தில் வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

41 minutes ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

3 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

3 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

4 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

5 hours ago

திருவிழா பிரச்சனையா? இரு தரப்பினர் மோதல்., வீடுகளுக்கு தீ வைப்பு! புதுக்கோட்டை காவல்துறை விளக்கம்!

புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…

6 hours ago