தென் ஆப்ரிக்காவில் 19 வயது உட்பட்டவர்களுக்கான (U19) உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்திய அணி கால் இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதியில் பாகிஸ்தான் அணியுடன் இன்று மோதுகிறது. இத்தொடர் முழுவதும் இந்த இரு அணிகளும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன என குறிப்பிடப்படுகிறது. இந்திய அணியில் யஷஸ்வி, அதர்வா அங்கோலேகர், ரவி பிஷ்னோய் மற்றும் கார்த்திக் தியாகி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி வலிமையுடன் உள்ளது. அதைப்போன்றுபாகிஸ்தான் அணியிலும் அதிவேக பந்துவீச்சாளர்கள் இருப்பதால், இப்போட்டி இரு அணிக்கும் கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலககோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்த இரு அணிகளும் 10-வது முறை இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. கடந்த 9 ஆட்டங்களில் 5 முறை பாகிஸ்தானும், 4 முறை இந்தியாவும் வென்றுள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு சென்வெஸ் பார்க், போட்செஃப்ஸ்ட்ரூம் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்தியா யு19 அணி விவரம் : பிரியம் கார்க் (கேப்டன்), துருவ் ஜுரேல் (WK), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திவ்யான்ஷ் சக்சேனா, திலக் வர்மா, சித்தேஷ் வீர், அதர்வா அங்கோலேகர், ரவி பிஷ்னோய், சுஷாந்த் மிஸ்ரா, கார்த்திக் தியாகி, ஆகாஷ் சிங், வித்யாதர் பாட்டில், சுபாங் ஹெக்டே, சஷ்வத் ராவத், குமார் குஷாகிரா.
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…
நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…
திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…