கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி லண்டனில் நடைபெற்றதில், ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டி நேற்று ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி மற்றும் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பில்ஸ்கோவா இடையே நடைபெற்றது. இதில் மூன்று செட்கள் நடந்தது. அதில் முதல் செட்டில், ஆஷ்லி பார்டி 6-4 என்ற கணக்கில் முன்னிலை வகித்தார்.
இரண்டாவது செட்டில் பார்டி கடுமையாக முன்னேற முயன்றார். இருந்தபோதிலும், 6-7 என்ற கணக்கில் கரோலினா வென்றுள்ளார். இதனை அடுத்து இறுதி கட்ட முடிவை தெரிவிக்கும் மூன்றாவது செட்டில் பார்டியின் அசத்தலான ஷாட்களால் கரோலினாவை 6-3 என்ற கணக்கில் அபாரமாக வீழ்த்தி வெற்றி வாகை சூடியுள்ளார்.
இதனால் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி 6-4, 6-7, 6-3 என்ற கணக்கில் கரோலினாவை வீழ்த்தி விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். மேலும், இவர் இதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…