நாடு முழுவதும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத பொதுவிநியோகத் திட்டம் குறித்து மாநில அரசுகளுடன் இன்று மத்திய அரசு முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறது. அதன்படி,டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆலோசனை நடத்துகிறார்.தமிழகம் சார்பில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கலந்து கொள்கிறார். குறிப்பாக,இந்த கூட்டத்தில் உணவுப்பொருட்களில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்குவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக புகார் புத்தகம் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் காலாவதியான பொருட்களை வழங்கினால், பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ரேசனில் தரமான பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் […]