அடுத்த மாதம் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் மிசோராம் மாநிலமும் ஒன்று. 40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மிசோராமில் வரும் நவம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சார வேலைகளை பிரதான கட்சியினர் தீவிரப்படுத்தியுள்ளனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மிசோரம் சென்றுள்ளார். இன்று (திங்கள்கிழமை) மிசோராம் தலைநகர் ஐஸ்வாலில் ஆளுநர் மாளிகை நோக்கி சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் பேரணி மேற்கொண்டார். மிசோரம் […]
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டம் முடிந்த பின், செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து மாநிலங்களிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் அறிவித்தார். பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதையடுத்து, நாடு முழுவதும் அதற்கான சூழலை எதிர்க்கட்சிகள் உருவாக்கி வருகின்றன. இப்பொது, ஜாதிவாரி கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்த வேண்டும் என ராகுல் […]
2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டால் பாஜகவை வீழ்த்த முடியும் என ராகுல் காந்தி பேட்டி. நான் களத்தில் இருந்து நேரடியாக பார்க்கிறேன் என்ற வகையில் சொல்கிறேன், வரும் நாடாளுமன்ற தேர்தல் பாரதி ஜனதா கட்சிக்கு மிகக் கடுமையாக இருக்கும் என இந்திய ஒற்றுமை பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் களத்தை சரியாக புரிந்து கொண்டால் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிப்பது மிக சுலபம். […]
ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின். பாஜகவின் குறுகிய எண்ணம் கொண்ட அரசியலுக்கு மாற்று தலைவராக ராகுல் காந்தி விளங்குவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் சோனியா காந்தியின் முயற்சிகளுக்கு பலன் கிடைத்திருப்பதாகவும், இந்திய ஒற்றுமை பயணம் மூலம் நாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை நன்கு உணர முடிவதாகவும் கூறியுள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க […]
ராகுல் காந்திக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம். இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்ளும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. ராகுல் காந்திக்கான பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார். ஒற்றுமை பயணத்தில் பங்கேற்கும் மக்கள் மற்றும் தலைவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் […]
கொரோனா பரவல் குறித்து காங்கிரஸ் கட்சியும் அக்கறை கொண்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் பேச்சு. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை தடுக்கவே, கொரோனா நாடகத்தை பிரதமர் உருவாக்கி உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் கேசி வேணுகோபால் குற்றசாட்டியுள்ளார். கொரோனா பரவல் குறித்து காங்கிரஸ் கட்சியும் அக்கறை கொண்டுள்ளதாகவும், சீனாவில் இருந்து விமானங்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. தேசிய அளவில் கொரோனா கட்டுப்பாடு எதுவும் அமலில் இல்லை எனவும் தெரிவித்தார். பொது கூட்டங்களில் பேசி […]
வெறுப்புணர்வை ஒழிப்பதே ஒற்றுமை பயணத்தின் நோக்கம் என டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உரை. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த ஒற்றுமை யாத்திரை 11வது மாநிலம், 108வது நாளான இன்று டெல்லியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் பாரத் ஜோடோ யாத்ரா நிகழ்வில் பேசிய […]
அனைத்து ஜனநாயக சக்திகளும் ராகுல்காந்திக்கு துணை நிற்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் பேச்சு. சனாதன சக்திகளை முற்றிலுமாக அப்புறப்படுத்துவது தான் ராகுல் காந்தியில் ஒற்றுமை பயணத்தின் நோக்கம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெற்ற ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் விசிக தலைவர் திருமாவளவன் எம்பி, துரை ரவிக்குமார் எம்பி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய தொல்.திருமாவளவன், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்துகிற சனாதன சக்திகளை […]
ராகுல் காந்தி நடத்தி வரும் “பாரத் ஜோடோ” யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்பு. டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நடத்தி வரும் “பாரத் ஜோடோ” என்ற இந்திய ஒற்றுமை யாத்திரையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியினருடன் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சமயத்தில், டெல்லியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு இந்தியனாக பங்கேற்கவுள்ளேன் […]
இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் கலந்துகொண்ட திமுக எம்.பி கனிமொழி. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களின் ஆதரவை திரட்டு வண்ணம் குமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த நடைப்பயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் இன்று ஹரியானா மாநிலம், சோனா அருகே கிரில் லாலா பகுதியில் ராகுல் காந்தி அவர்கள் நடைபயணத்தை தொடர்ந்தா. இதில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் […]
கொரோனா விதிகள் குறித்து என்னிடம் கேள்வி கேட்பது எனது கடமையைத் தடுப்பது போன்றது என அமைச்சர் மாண்டவியா கடிதம். இந்திய ஒற்றுமை பயணத்தில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவிய கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘பாரத் ஜோடோ யாத்ரா’வின் போது கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மாஸ்க் அணிந்து, சானிட்டரை பயன்படுத்துங்கள், இல்லையென்றால் தேச நலனை கருத்தில் கொண்டு நடைப் பயணத்தை ஒத்திவையுங்கள் என […]
மக்கள் ஆதரவை கண்டு பயந்து பாரத் ஜோடோ யாத்திரையை சீர்குலைப்பதே பாஜகவின் நோக்கம் என அசோக் கெலாட் ட்வீட். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்திற்கு ஆதரவு பெருகி வருவதால், அதை சீர்குலைக்க நினைக்கிறது பாஜக என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றசாட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ராஜஸ்தானில் பாரத் ஜோடோ யாத்திரை இன்று காலையில் நிறைவடைந்தது. ஆனால், பாஜகவும், மோடி அரசும் இங்கு கூடியிருக்கும் பெரும் கூட்டத்தைக் கண்டு […]
மத்திய அரசின் விலையில் பாதிக்கும் குறைவாக ரூபாய் 500-க்கு கேஸ் சிலிண்டர்கள் தரப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளதற்கு ராகுல் காந்தி வரவேற்பு. மத்திய அரசின் விலையில் பாதிக்கும் குறைவாக ரூபாய் 500-க்கு கேஸ் சிலிண்டர்கள் தரப்படும் என ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளதற்கு ராகுல் காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மத்திய அரசின் விலையில் பாதிக்கும் குறைவாக ரூபாய் 500-க்கு கேஸ் சிலிண்டர்கள் தரப்படும் என்ற ராஜஸ்தான் காங்கிரஸ் அரசின் […]
ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தின் 100-வது நாள் நிகழ்வை இன்று கொண்டாட ஜெய்ப்பூரில் ஏற்பாடு. மக்களை ஒன்றுபடுத்த காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தொடங்கிய இந்திய ஒற்றுமை பயணம் இன்றுடன் 100வது நாளை எட்டியுள்ளது. இதை ஜெய்ப்பூரில் சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது. 150 நாட்களுக்குள், 12 மாநிலங்களில் 3,500 கி.மீ தூரத்தை கடக்க திட்டமிடப்பட்டுள்ளது. மக்களை ஒன்றுபடுத்துவதற்காக இந்திய ஒற்றுமை பயணத்தைக் கடந்த செப்.7-ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கினார். இந்த நிலையில், ராகுல் காந்தி […]
குஜராத்தின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஒரு வேண்டுகோள்,அனைவரும் வாக்களியுங்கள். – என குஜராத் சட்டமன்ற தேர்தல் குறித்து ராகுல்காந்தி எம்பி டிவீட் செய்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று குஜராத் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. இதுவரையில் பாஜக, காங்கிரஸ் என இருமுனை போட்டியாக இருந்த நிலையில், இந்த முறை ஆம் ஆத்மி களமிறங்கி மும்முனை போட்டியாக மாற்றியுள்ளது. மூன்று கட்சிகளும் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று […]
இந்திய ஒற்றுமை பயணத்தின்போது தன்னை தானே சாட்டையால் அடித்து கொண்டார் ராகுல் காந்தி. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ‘இந்திய ஒற்றுமை’ பயணம் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த செப்.7-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தனது நடை பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, கேரளா, கர்நாடகாவை அடுத்து தற்போது தெலுங்கானா மாநிலத்தில் 57வது நாளாக இன்று தனது பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும், இளைஞர்களும் அவருடன் […]
காங்கிரஸ் கட்சியில் தலைவரே உச்சபட்ச அதிகாரம் உள்ளவர். ‘என தெரிவித்தார். அவரே கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுப்பார். – காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கருத்து. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 7897 வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் 1072 வாக்குகளே பெற்றார். நீண்ட வருடங்களுக்கு பிறகு, நேரு குடும்பத்தை சாரத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது இதுவே […]
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் வாக்களித்தார் ராகுல் காந்தி. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலின் வாக்குப்பதிவு இன்று டெல்லி உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூர் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 67 வாக்குச்சாவடிகளில் காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள அலுவலகத்தில் இடைக்கால […]
ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலை எங்கே? – காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி. கர்நாடக மாநிலம் பல்லாரியில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவேன் என்று பிரதமர் கூறினார். அந்த வேலைகள் எங்கே போனது? மாறாக கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையிழந்துள்ளனர். கர்நாடகாவில் 2.5 லட்சம் அரசுப் பணியிடங்கள் […]
மைசூரில் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் சோனியா காந்தியும் பங்கேற்றுள்ளார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பங்கேற்றுள்ளார். கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் நடைபெறும் இந்திய ஒற்றுமை பயணத்தில் சோனியா காந்தி கலந்துகொண்டுள்ளார். மாண்டியாவில் ராகுல் காந்தியுடன் சேர்ந்து சோனியா காந்தி நடந்து செல்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சோனியா காந்தி பொது நிகழ்ச்சிக்கான இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொண்டுள்ளார். செப்டம்பர் 7-ஆம் தேதி ராகுல் காந்தி தனது […]