சென்னை : தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு அறிவிப்பை TNPSC அறிவித்துள்ளது. தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் இன்று தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப பணிகளுக்கான வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு என வரையறுக்கப்பட்ட இந்த தேர்வானது மொத்தம் 20 பணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க கடைசி தேதி 14.06.2024 என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாள் : பொதுத்தமிழ், பொது அறிவு, திறனறிவு, நுண்ணறிவு ஆகியவை அடங்கிய முதல் தாள் தேர்வு […]
TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய போட்டித்தேர்வாக உள்ள குரூப் 4 (Group 4) தேர்வு தேதியினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 காலி பணியிடங்களுக்கும் காலிப்பணியிட அறிவிப்பான் கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான தேர்வு தேதியினை TNPSC அறிவித்துள்ளது. […]
TNPSC: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் – 1 தேர்விற்கான அறிவிப்பை வெளியிட்டது. துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட அலுவலர் (தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்) உள்ளிட்ட இடங்களில் உள்ள 90 காலிப்பணியிடங்களை நிரப்பு நடப்பாண்டு குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் அடுத்த […]
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு 5 புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தேவையான உறுப்பினர்களை தமிழக அரசு பரிந்துரை செய்து ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும், அந்த வகையில் 5 புதிய உறுப்பினர்களை தமிழக அரசு பரிந்துரை செய்து ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பியது. தமிழ்நாடு அரசின் பரிந்துரை ஏற்று டி.என்.பி.எஸ்.சிக்கு ஐந்து புதிய உறுப்பினர்களைநியமனம் செய்ய ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். கூட்டணி வேண்டுமென்றால் அதிமுக தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் […]
தமிழக அரசின் சேவைகள் கிராமப்புற மற்றும் ஊரக பகுதி மக்களுக்கும் நேரடியாக விரைவாக சேரும் வகையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் “மக்களுடன் முதல்வர்”. இந்த திட்டம் மூலம் இணைய சேவை வாயிலாக மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சேவைகள் மக்களுக்கு நேரடியாக கொண்டு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று முகாம் அமைத்து மக்களிடம் அவர்களுக்கு தேவையான சேவைகளை நேரடியாக கேட்டு அதனை ஆன்லைன் வழியாக பதிவிட்டு அந்தந்த துறை […]
இலட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் இருக்கின்ற நிலையில், 10 விழுக்காட்டிற்கும் குறைவான காலிப் பணியிடங்களுக்கு ‘டிஎன்பிஎஸ்சி’ அறிவிப்பு வெளியிட்டு இருப்பது யானை பசிக்கு சோளப் பொறி போடுவது போல் அமைந்துள்ளது என 6,244 இடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி.யின் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு குறித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அரசு ஊழியர்கள் இருந்தால்தான் மக்களின் திட்டங்கள் விரைவில் மக்களை சென்றடையும். ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலான திமுக ஆட்சியில் […]
தமிழகத்தில் குறைந்தபட்ச கல்வி தகுதியில் அதிக தேர்வர்கள் எழுதும் முக்கிய தேர்வாக பார்க்கப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) தேர்வின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. 10ஆம் வகுப்பு கல்வி தகுதியை கொண்டு நிரப்பப்படும் இத்தேர்வின் மூலம் இம்முறை 6,244 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு..! அதிகாரபூர்வ அறிவிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் அறிவிப்பு இன்று (30.01.2024) வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க […]
தமிழகத்தில் அரசுத்துறைகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பணியாற்ற விரும்பும் பட்டதாரி இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் TNPSC, SSC, IBPS, RRB உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களால் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள், சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரியில் 500 இடங்களுக்கும், சென்னை சேப்பாக்கம் மாநிலக் கல்லூரி […]
அரசுப்பணிக்கு தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க, ஒரு மாதத்தில் விசாரணைக்குழு அமைக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டள்ளது. 2015-ல் குரூப் 2 தேர்வில் உரிய மதிப்பெண் பெற்ற சாய்புல்லா என்பவரை தேர்வு செய்ய தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து TNPSC தேர்வாணையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தேர்வு தொடர்பாக உண்மை தகவல்களை மறைத்ததாக தேர்வாணைய அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை […]
டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் குரூப் – 2 முதன்மை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் (டிஎன்பிஎஸ்ச), தொகுதி 2 மற்றும் 2A பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய இரு தாள்களுக்கும் தேர்வு 25.2.2023 அன்று நடைபெற்றது. 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத் தேர்வினை 51,000-க்கும் மேற்பட்ட […]
குரூப் 2 பணியிடங்களுக்கான எண்ணிக்கையை 6,151 ஆக அதிகரித்து டி.என்.பி.எஸ்.சி (TNPSC) அறிவித்துள்ளது. முன்னதாக, குரூப் 2 பணியிடங்களில் 5,413ஆக இருந்த நிலையில், 738 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு 6,151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜனவரி 12இல் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தேர்வு முடிவுகள் வரும் 12ம் தேதி வெளியாக உள்ள நிலையில், காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் இயற்கை பேரிடர் காரணமாக த.நா.பொதுத் தேர்வாணையம் நடத்தும் பொறியியல் பணிகளுக்கான தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியதாவது ” தமிழ்நாடு பொதுத் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வரும் ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ள பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என்று விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தூத்துக்குடி, திருநெல்வேலி […]
2024 – 2025ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வுகளுக்கான அறிவிப்பு அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலையில் தேர்வு நடத்தப்படும். குரூப்-2, 2A தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும். குரூப்-4 தேர்வுக்காக அறிவிக்கை அடுத்தாண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மின்சாரம் மற்றும் நிவாரணப் பொருட்கள் […]
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்ய ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு என 3 மாவட்டத்திற்கும் நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என 4 மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனால் நிர்வாக காரணங்களுக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நெருங்கும் புயல்.! […]
பிப்ரவரி 25ம் தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் 2A முதன்மைத் தேர்வின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 80% க்கு மேல் நிறைவடைந்துள்ளது என்றும், டிசம்பர் மாதம் முதல் வாரத்திற்குள் மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் சுமார் 6,000 பேருக்கு அரசு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தொகுதி 2 மற்றும் 2அ பணிகளுக்கான […]
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற சிவில் நீதிபதி தேர்வில் குளறுபடி ஏற்பட்டுள்ள விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. வடசென்னையில் உள்ள தேர்வு மையத்தில் மதியம் நடைபெறவிருக்கின்ற தேர்வுக்கான கேள்வித்தாள் ஆனது காலையிலேயே விநியோகிக்கப்பட்டதால் தேர்வர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி கூறுகையில், இந்த தேர்வை நடத்துவது சென்னை உயர் நீதிமன்றம். அவர்கள் தயார் செய்த கேள்வித்தாள்களை தான் எங்களிடம் கொடுத்தார்கள். நாங்கள் அதை தேர்வர்களுக்கு வினியோகம் செய்தோம். இதில் எங்களுடைய தவறு எதுவும் […]
தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இது GROUP தேர்வு என்ற வகைகளின் கீழ் பல்வேறு அரசு துறையில் உள்ள பணியிடங்கள் நிரப்படுகிறது. இந்த நிலையில், GROUP VII-A தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் 9 முதல்நிலை நிர்வாக அதிகாரி காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள 9 […]
டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வுக்கு மேலும் 2,500 காலிப்பணியிடங்கள் சேர்ப்பு என அறிவிப்பு. குரூப் – 4 தேர்வுக்கு மேலும் 2,500 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே, 7301 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது கூடுதலாக பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் -4 தேர்வை 15 லட்சம் பேர் எழுதினர். எனவே, இதன் முடிவுகள் ஜனவரியில் வெளியாக வாய்ப்புள்ளது. ஜூலையில் நடைபெற்ற தேர்வின் விடைத்தாள் திருத்தும் […]
முதன்மை தேர்வுகளுக்கும் இடையே 9 மாத இடைவெளி மிகவும் அதிகம் என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட். டி.என்.பி.எஸ்.சி தேர்வு அட்டவணை குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் மாவட்ட துணை ஆட்சியர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்கான தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படும். நவம்பர் மாதத்தில் முதல் நிலைத் தேர்வு, 2024 ஜூலையில் முதன்மைத் தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது, டி.என்.பி.எஸ்.சி அடுத்த ஆண்டு மிகக்குறைந்த […]
நவம்பர் மாதம் குருப் 1 முதல்நிலை தேர்வு நடைபெறும். – டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மையமான டிஎன்பிஎஸ்சி , தமிழக அரசு காலிப்பணியிடங்களில் பெரும்பாலான பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது . அந்த வகையில் அடுத்த வருடம் நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 1 தேர்வு அட்டவணை குறிப்பிடப்படாமல் இருந்தது. தற்போது , குரூப் 1 தேர்வு உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டது. அதில் நவம்பர் […]