சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 131 கல்லூரிகளிலும் திருநங்கைகளுக்கு தலா ஒரு இடங்கள் இலவசமாக ஒதுக்கப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பல்கலைக் கழகத்தின் கீழ் வரும் 131 கல்லூரிகளிலும் திருநங்கையர்களுக்கு இலவசமாக இடம் வழங்க அப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி,சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் 3 ஆம் பாலினத்தவர்களுக்கு தலா ஒரு இடம் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிண்டிகேட் ஒப்புதல் தந்த பிறகு வரும் கல்வியாண்டு முதல் இந்த […]
வாழ்வாதாரம் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 மட்டும் நிவாரண உதவி வழங்கப்படும்என்றும் கூடுதல் தொகை வழங்குவதாக எந்த உறுதியும் அளிக்கவில்லை எனவும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு […]