பிரயாக்ராஜ் : உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்குச் சென்ற பக்தர்களின் பொலேரோ விபத்துக்குள்ளானது. ஒரு பொலேரோவும் பேருந்தும் மோதியதில் 10 பக்தர்கள் உயிரிழந்தனர், 19 பக்தர்கள் காயமடைந்துள்ளனர். தற்போது, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலின்படி, நேற்று இரவு மேஜாவில் உள்ள பிரயாக்ராஜ்-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் ஒரு பயங்கரமான சாலை விபத்து நடந்தது. பக்தர்கள் நிரம்பிய ஒரு பொலேரோவும் ஒரு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் பொலேரோவில் பயணம் செய்த 10 பக்தர்களும் சம்பவ இடத்திலேயே […]
உத்தரபிரதேச மாநிலத்தில் கஸ்கஞ்ச் பகுதியில் டிராக்டர் கவிந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கங்கை நதியில் புனித நீராட பக்தர்களை ஏற்றி சென்று கொண்டிருந்ததாக டிராக்டர் உத்தரபிரதேச மாநிலத்தில் கஸ்கஞ்ச் பகுதியில் உள்ள குளத்தில் கவிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் கஸ்கஞ்சில் உள்ள பாட்டியாலி தரியாவ்கஞ்ச் என்ற சாலையில் காலை 10 மணியளவில் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த கோர […]
உத்தர பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் பேருந்து மற்றும் லாரி மோதியதில் 6 பேர் பலி மற்றும் 15 பேர் படுகாயம். உத்தர பிரதேச மாநிலத்தின் பஹ்ரைச்சின் தப்பே சிபா பகுதியில், பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலிசார் தெறிவித்தனர். இந்த விபத்து சம்பவம் அதிகாலை 4.30 மணியளவில் நடந்துள்ளதாக காவல் அதிகாரி ராஜேஷ் சிங் தெரிவித்தார். சம்பவம் குறித்து தகவலறிந்ததும் போலிசார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். […]