சென்னை: வடதமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் நிலவிய “ஃபெஞ்சல்” புயல், மதியம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து. மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மேலும் வலுக்குறைந்து, வடதமிழக உள் பகுதிகளில் நிலவுகிறது. இது, நாளை காலை தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். வலுவிழந்த ஃபெஞ்சல் புயல், மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது சேலம் அருகே மையம் கொண்டுள்ளது. இதன் காரணாமாக, தமிழகத்தில் அநேக இடங்களிலும், […]
சென்னை : வட கடலோர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நேற்றைய காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து இன்று (2 டிசம்பர்) வட உள் தமிழகம் அதே பகுதியில் நீடித்தது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு-மத்திய அரபிக்கடலில் வடக்கு கேரளா-கர்நாடகா கடற்கரையில் உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு கடற்கரைகளுக்கு 2-ஆம், 3 -ஆம் தேதி காற்றின் வேகம் […]
கோவை : மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இன்று (டிச.2) மிக கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஒகேனக்கல், சிறுவாணி ஒட்டிய மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், சுற்றுலாப் பயணிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்த்தப்பட்டுள்ளது. Weather advisory for […]
சென்னை : தமிழகத்திற்கு மிக கனமழையை கொடுத்துவரும் ஃபெஞ்சல் புயல், இன்று காலை மேலும் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது. நேற்று காலை புயலாக இருந்த ஃபெஞ்சல், படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகியிருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், […]
கிருஷ்ணகிரி : ஃபெஞ்சல் புயல் நேற்று கரையை கடந்த நிலையில், அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மேலும் வலுவிழந்து வட உள் தமிழ்நாட்டில் நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த புயலின் காரணமாக புதுச்சேரி, விழுப்புரம், தர்மபுரி, கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஊத்தங்கரை பகுதியில் பெய்த கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றுலும் பாதித்துள்ளது. ஏனென்றால், […]
சென்னை : வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை அருகே நள்ளிரவு கரையை கடந்த புயல் இன்று காலை 11.30 மணிக்கு வலுவிழந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை (டிச.2) 5 மாவட்டங்களுக்கு மிகக்கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (மாலை 6 மணி வரை) பல்வேறு மாவட்டங்களுக்கான சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் முதல் மிதமான மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கீழே அதற்கான பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் பகுதி இருக்கிறதா? என பார்த்து கொள்ளுங்கள்… ரெட் அலர்ட் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே நள்ளிரவு கரையை கடந்த இந்த புயல் இன்று காலை 11.30 மணிக்கு வலுவிழந்ததாக வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 12 மணி நேரமாக நகராமல் புதுச்சேரிக்கு அருகே மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு கணித்துள்ளது. தற்பொழுது, கடலூரில் […]
சென்னை : ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தாலும், தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 21 செ.மீ. மேல் மழை பெய்யும் என்பதால் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, […]
சென்னை : வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயல், புதுச்சேரி அருகே முழுமையாக கரையைக் கடந்தது. நேற்று (நவ.30) மாலை 5.30-க்கு கரையைக் கடக்க தொடங்கிய புயல், இரவு 11.30 மணியளவில் முழுமையாக கரையை கடந்தது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயல் கரையைக் கடந்தபோது பலத்த சூறைக்காற்று வீசியது. இந்நிலையில், நேற்றிரவு கரையை கடந்த ஃபெஞ்சல் புயல், தற்போது புதுச்சேரி அருகே ஆணி அடித்தது போல நிற்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று […]
சென்னை : கடந்த 5 நாட்களாக முதல் தமிழகத்தில் ஆட்டம் காட்டி வந்த ஃபெஞ்சல் புயலானது தற்போது கரையைக் கடந்துள்ளது. முன்னதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுவதற்கு முன்பிலிருந்தே அதன் போக்கை வானிலை ஆய்வு மையத்தால் சரியாக கணிக்க முடியாமல் இருந்தது. இதனால், புயல் கரையைக் கடக்கும் சரியான இடத்தையும் சரியான நேரத்தையும் கணிக்க முடியாமலே இருந்தன. ஆனால், அதனைத் தொடர்ந்து மாலை 5.30 மணி அளவில் ஃபெஞ்சல் புயலானது கரையைக் கடக்க தொடங்கியதென வானிலை […]
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலானது தற்போது கரையை கடந்து கொண்டிருக்கிறது. மாமல்லபுரம் – காரைக்கால் பகுதிக்கு இடையே கரையை கடந்து வரும் புயலால் அப்பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பதன் காரணமாக எந்தெந்த பகுதியில் வானிலை எவ்வாறு இருக்கும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் , “ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பதன் காரணமாக பாண்டிச்சேரி பகுதியில் கனமழை […]
சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஃபெஞ்சல் புயலானது இன்று மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. கரையை கடக்கும் போது சுமார் 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது புதுச்சேரிக்கு அருகே ஃபெஞ்சல் புயல், புயலாகவே கரையை கடக்க துவங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 7 கிமீ வேகத்தில் மெதுவாகவே இந்த […]
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் இன்னும் சில மணி நேரங்களில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார வடமாவட்டங்கள், புதுச்சேரி வரையிலான கடலோர மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. காரைக்கால் – மாமல்லபுரம் இடையே மரக்காணம் பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும் சமயத்தில் 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று […]
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று(நவ.30) மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் கரையைக் கடக்கும் . ஃபெஞ்சல் புயல் காரணமாக 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் புயல் முழுமையாக கரையை கடக்க சில மணி நேரங்கள் ஆகலாம் என ஏற்கனவே, தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவலை தெரிவித்து இருந்தார். இந்த புயலின் காரணமாக, சென்னை, செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகளில் […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள “ஃபெஞ்சல்” புயலானது எப்போது கரையை கடக்கும்? எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றி தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவலை தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்பதை உறுதிப்படுத்தினார். இது குறித்து பேசிய அவர் ” தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று(நவ.30) மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே புதுச்சேரிக்கு […]
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் “ஃபெஞ்சல்” புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (30-11-2024) காலை 830 மணி அளவில் அதே பகுதிகளில் புயலாக, புதுவையிலிருந்து சுமார் கிழக்கு-வடகிழக்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திலிருந்து வடக்கு-வடகிழக்கே 200 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து வடதமிழக – புதுவை கடற்கரையை காரைக்காலிற்கும் – மகாபலிபுரத்திற்கும் இடையே, புதுவைக்கு அருகே […]
சென்னை: வங்கக்கடலில் ஃபெஞ்சல் புயல் மணிக்கு 13கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 110கி.மீ தொலைவில் புயல் நிலைகொண்டுள்ளது. இன்று மதியம் கரையை கடக்கவிருந் தபுயல் இன்று இரவு அல்லது நாளை அதிகாலை வரை தாமதமாகலாம் என சுயாதீன வானிலை ஆய்வாளகள் பிரதீப் ஜான்மற்றும் ஹேமச்சந்திரன் ஆகியோர் கணித்துள்ளனர். இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். ஏற்கனவே, ஃபெஞ்சல் புயலால் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வரும் […]
சென்னை : வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயல் இன்று (நவ.30) இரவு அல்லது நாளை காலை கரையை கடக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவான ஃபெஞ்சல் புயல், மணிக்கு 13 கிமீ வேகத்தில் தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அது தற்போது, சென்னையில் இருந்து 110 கிமீ தென் கிழக்கிலும், புதுச்சேரியில் இருந்து 120 கிமீ வடகிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. இப்புயல் […]
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டு வடதமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் ஃபெஞ்சல் புயலானது மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று பிற்பகல் கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. புயல் கரையை கடக்கும் சமயம் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலின் தற்போதைய நிலை குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபெஞ்சம் புயலானது சென்னையில் இருந்து தென்கிழக்கே […]