தொழில்நுட்பம்

உஷார்..அச்சுஅசலாக உங்களை போல பேசும் AI..! உலகிற்கு சவால்விடும் ‘Deep fake’ தொழில்நுட்பம்..!

Published by
செந்தில்குமார்

உலகில் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் AI தொழில்நுட்பம் பல துறைகளில் ஆச்சரியம் கலந்த பல சாதனைகளை படைத்து வருகிறது. இதில் டீப்ஃபேக் (Deep fake) என்ற AI தொழில்நுட்பம் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதன்மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தெரிகிற ஒருவரின் சாயலை அப்படியே மற்றொருவரை போல மாற்றிவிடும் திறனை கொண்டுள்ளது.

deepfakesdeepfakes
deepfakes [Image Source : Malwarebytes]

இந்த டீப்ஃபேக் தொழில்நுட்பம் ஆரம்பத்தில் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்பொழுது, தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

டீப்ஃபேக் (Deep fake) உருவானது எப்படி..? 

2014 இல் இயன் குட்ஃபெல்லோ மற்றும் அவரது குழுவினரால் உருவாக்கப்பட்ட GAN என்ற தொழில்நுட்பத்தை இது சார்ந் துள்ளது. இந்த GAN என்பது ஜெனெரேட்டிவ் ஏஐ (Generative AI) தொழில்நுட்பத்தை அணுகுவதற்கான ஒரு முக்கிய அமைப்பாகும். GAN களால் மனித முகங்களின் புகைப்படங்கள் போன்று தோற்றமளிக்கும் படங்களை உருவாக்க முடியும்.

deepfakesdeepfakes
deepfakes [Image Source : NASSCOM Community]

டீப்ஃபேக் (Deep fake) தொழில்நுட்பத்தின் தாக்கம்:

டீப்ஃபேக் (Deep fake) தொழில்நுட்பம் ஆரம்பத்தில் பொழுதுபோக்கு நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டது. அதனை வைத்து நண்பர்களின் புகைப்படங்களை, நடிகர்களின் புகைப்படங்கள் போல மாற்றம் செய்து சமூக வலைதளங்களில் பதிவிடுவார்கள்.

ஆனால், தற்பொழுது பல பிரபலங்களின் முகம் அல்லது மற்றவர்களின் முகத்தை அனுமதியின்றி பயன்படுத்தி, ஆபாச வீடியோக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பிரச்சாரம் செய்வது போன்ற போலியான வீடியோக்களாக மாற்றி, பல தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர். இது பலரின் வாழ்க்கை கேள்விக்குறியாக்குவதோடு, தனிநபர் மட்டுமல்லாமல் தேசிய பாதுகாப்பிற்கு கூட ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

deepfakes [Image Source : ZDNET]
எப்படி பாதுகாப்பாக இருக்கலாம்.?

ஆராய்ச்சி நிறுவனமான சென்சிட்டி ஏஐயின் கூற்றுப்படி, 90 சதவீதத்திற்கும் அதிகமான டீப்ஃபேக் இணையதளங்களில் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இது ஒருவரை உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கிறது.

இந்த டீப்ஃபேக் தொழில்நுட்பத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க மக்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதன் மூலமும், டீப்ஃபேக்குகளை கண்டறியும் அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதன் மூலமும் இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

அவற்றினை கண்டுபிடிக்கும்வரை இதிலிருந்து மீள்வதற்கு உங்களது புகைப்படங்கள் வீடியோக்களை நம்பகத் தன்மையான  இணையதளங்கள் மற்றும் செயலியின் பாதுகாப்பு தன்மையை அறிந்து பதிவிடுவதே ஒரே வழி.

Published by
செந்தில்குமார்

Recent Posts

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி….நாளை இந்த மாவட்டங்களில் மழைக்கு வைப்பு!

சென்னை : வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக…

5 hours ago

துரோக கூட்டணியை வீழ்த்துவோம்! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை :  மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல…

5 hours ago

‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பஹத் பாசில் தமிழில் இந்த முறை வடிவேலுடன்…

6 hours ago

“பரிபூரண உடல்நலம் பெற்றிட…”முதல்வர் ஸ்டாலின் நலம் பெற விஜய் வாழ்த்து!

சென்னை :  முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…

7 hours ago

என்னைக்கும் விடாமுயற்சி..கால் உடைந்தும் களத்தில் இறங்கிய ரிஷப் பண்ட்!

மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கால் விரலில்…

8 hours ago

இந்தியா-பிரிட்டன் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து…பிரதமர் மோடி பெருமிதம்!!

லண்டன் : இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…

8 hours ago