Bard Vs ChatGPT [Image source : lifestyleasia ]
கூகுள் தனது செயற்கை நுண்ணறிவு செயலியான BARD-யை இந்தியா உட்பட 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது மென்பொருள் தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பம். இந்த தொழில்நுட்பம் நாம் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை அப்படியே தந்துவிடும் அம்சம் கொண்டது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் கூகுள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட AI தான் இந்த கூகுள் பார்ட்(Bard).
Chat GPT-க்கு போட்டி:
முன்னதாக, சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான OpenAI ஆல் உருவாக்கப்பட்ட ChatGPT என்ற AI அறிமுகமான சில வாரங்களிலேயே பத்து லட்சம் பயனர்களை ஈர்த்தது. தற்பொழுது, Chat GPT-க்கு போட்டியாக மீண்டும் AI-களுக்கான களத்தில் பார்ட் இறக்கிவிடப்பட்டுள்ளது.
180க்கும் மேற்பட்ட நாடுகளில் BARD:
ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பார்ட் முதலில் சோதனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டாலும், சிறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூகுள் அந்த கோளாறுகளை தற்போது சரிசெய்து பார்ட் AI-யை இந்தியா உட்பட 180க்கும் மேற்பட்ட நாடுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.
40 மொழிகளில் விரிவு:
பார்ட் ஆங்கிலம், ஜப்பானியம் மற்றும் கொரிய மொழிகளில் கிடைக்கிறது. மேலும், 40 மொழிகளில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு உரையை உருவாக்கலாம், அதனை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கலாம். உங்கள் கேள்விகளுக்கு விரிவான மற்றும் தகவலறிந்த விதத்தில் பதிலளிக்கும் திறனையும் பெற்றுள்ளது. பார்ட் இன்னும் மேம்பாட்டில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக உயர்மட்டக் குழு கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கலந்து கொண்டார். கலந்து…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட்…
நாமக்கல் : இன்று (ஜூன் 8) 01.00 மணியளவில், தாராபுரத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு நாமக்கல் வழியாக சோயா ஆயில் லோடு…
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில் அரசியல் வட்டாரத்தில் இப்போதே கட்சிகளுடைய கூட்டணி குறித்த தகவல்கள் பரவ…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட மோதல்,…