தொழில்நுட்பம்

ட்வீட் டெக் எடுக்கவில்லையா.? காரணம் இதுதான்..புதிய கட்டுப்பாடு விதித்து அதிர்சி கொடுத்த மஸ்க்.!!

Published by
பால முருகன்

ட்விட்டரை போலவே பயனர்கள் பலரும் ட்வீட் டெக்கை  உபயோகம் செய்து  வருகின்றனர். இந்த ட்வீட் டெக்கின் மூலம் பல கணக்குகளின் போஸ்ட்களை ஒரே திரையில் பார்க்க முடியும். இந்த அம்சம்இதில்  உள்ளதால் இதனை பலரும் பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில்,  கடந்த சில நாட்களாகவே ட்வீட் டெக் சரியாக இயங்காமல் இருந்தது. இதனால் பயனர்கள் பலரும் இதற்கு என்ன காரணம்..? என கேள்வி எழுப்பி  வந்தனர். இதனையடுத்து, அதற்கு காரணமும் புதிய கட்டுப்பாடு ஒன்றையும் ட்விட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் விதித்துள்ளார்.

அதன்படி, இனிமேல் ட்விட்டரின் ட்வீட் டெக்கை பயன்படுத்த, பயனாளர்கள் 30 நாட்களுக்குள் தங்கள் கணக்கிற்கு அங்கீகாரம் (Verified Account) பெற்றிருக்க வேண்டும் அப்படி பெற்றிருந்தால் மட்டும் தான் நீங்கள் ட்வீட் டெக்கை  பயன்படுத்த முடியும் என எலான் மஸ்க் புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளார். இதனால் பயனர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும்,ஏற்கனவே, முன்னதாக எலான் மஸ்க் டிவிட்டரில் ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் ஒருநாளைக்கு  8,000 டிவிட்கள் ப்ளூ டிக் இல்லாதவதர்கள்  800 டிவிட்கள் ,  புதியதாக ப்ளூ டிக் வாங்கினால் அவர்கள் 400 டிவிட்களை பார்த்து கொள்ளலாம் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
பால முருகன்

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

7 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

8 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

8 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

9 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

9 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

10 hours ago