தொழில்நுட்பம்

ட்விட்டரின் பெயரை மாற்றிய எலான் மஸ்க்..! வச்சி செய்யும் நெட்டிசன்கள்..!

Published by
செந்தில்குமார்

கடந்த 2006ம் ஆண்டு மார்ச் மாதம் ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன் மற்றும் இவான் வில்லியம்ஸ் ஆகியோரால் ட்விட்டர் செயலி உருவாக்கப்பட்டது. பிறகு, உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் 2022ம் ஆண்டு 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினார்.

நிறுவனத்தை வாங்கியதிலிருந்து ஊழியர்கள் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் குறிப்பாக இனி ப்ளூ டிக் வைத்திருக்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின் போஸ்டுகளை பார்ப்பதிலும் எலான் மஸ்க் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.

இந்த சமயத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை அவரது தொழில்நுட்ப நிறுவனமான எக்ஸ் கார்ப்பின் லோகோவை மையமாக வைத்து எக்ஸ் (X) என்று மாற்ற முடிவு செய்திருப்பதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். அதன்படி, தற்பொழுது நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை எக்ஸ் (X) என மாற்றியுள்ளார்

எலான் மஸ்கின் இந்த நடவடிக்கையால் குழப்படைந்த ட்விட்டர் பயனர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் மீம்ஸ்களை உருவாக்கி, எக்ஸ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடகங்களில் வைரலாக்கி வருகின்றனர். அதிலும் சிலர் புதிய லோகோவைக் கூட உருவாக்கி பதிவிடுகிறார்கள்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

7 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

7 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

8 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

8 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

9 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

10 hours ago