AppleVisionPro [Image Source : Twitter/@EngadgetChinese]
ஆப்பிள் விஷன் ப்ரோ எந்த ஒரு மேற்பரப்பையும் தொடுதிரையாக மாற்றும் திறனைக் கொண்டுள்ளது என டெவலப்பர் ஸ்டீவ் ட்ரட்டன் கண்டுபிடித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனம், சமீபத்தில் தனது புதிய படைப்பான ஆப்பிள் விஷன் ப்ரோ (Apple Vision Pro) என்று அழைக்கப்படும் Virtual Realty அம்சத்துடன் தாறுமாறான புதிய ஹெட்செட்டை அறிமுகம் செய்து, அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள ஆப்பிள் ஷோரூமில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.
இந்த விஷன் ப்ரோவில் உள்ள கேமரா மூலம் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து அதனை பார்க்கும் போது, அது புகைப்படம் போல அல்லாமல், நீங்கள் உண்மையாகவே அங்கே இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விஷன் ப்ரோவை, ஒரு ஸ்மார்ட்போன் போல பயன்படுத்தலாம்.
அதாவது, நீங்கள் ஒரு ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் செயல்பாடுகளான வீடியோ கால் பேசுவது, திரைப்படம் பார்ப்பது, யூடியூப், குரோம் போன்றவற்றை, இந்த ஆப்பிளின் விஷன் ப்ரோ ஹெட்செட்டிலும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதனை கட்டுபடுத்துவதற்கு உங்களது குரல் அல்லது கை செய்கைகளை பயன்படுத்தலாம்.
தற்போது, ஆப்பிள் விஷன் ப்ரோ எந்த ஒரு சாதாரண மேற்பரப்பையும் தொடுதிரையாக (Touch Screen) மாற்றும் திறனைக் கொண்டுள்ளது என்று டெவலப்பர் ஸ்டீவ் ட்ரட்டன் கண்டுபிடித்துள்ளார். இதனால் ஹெட்செட்டில் உள்ள பயன்பாடுகளுக்கு, ஒரு மேற்பரப்பை தேர்ந்தெடுத்து, அதனை நாம் பயன்படுத்தும் செயலி அல்லது பயன்பாடுகளை கட்டுப்படுத்தும் தொடுதிரை ஆக மாற்ற முடியும்.
எடுத்துக்காட்டாக, ஆப்பிள் மியூசிக் செயலியை கட்டுப்படுத்த, தங்கள் மேசையை ஒரு விசைப்பலகையாக மாற்ற முடியும். இந்த விஷன் ப்ரோ ஹெட்செட் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் 3,499 டாலர் என்ற விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி, இதன் தற்போதைய விலை ரூ.2.86 லட்சமாக இருக்கும்.
ஆனால், இந்த ஹெட்செட் இன்னமும் மேம்பாட்டில்தான் உள்ளது. விரைவில் இந்தியாவில் அறிமுகமானவுடன் இந்த அற்புதமான சாதனத்தை ஆப்பிள் பயனர்கள் மட்டுமல்லாமல், மற்ற தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்களும் இதனை வாங்குவதற்கு வாய்ப்புள்ளது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம், மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில்…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
பாரிஸ் : FIFA கிளப் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியான செல்சியா எஃப்சி, பிரான்ஸ் அணியான…
சென்னை : தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து, “கன்னடத்து பைங்கிளி” மற்றும் “அபிநய…
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…