Mark Zuckerberg [Image source : Getty Images]
பேஸ்புக் நிறுவனத்தின் புதிய முயற்சிகள், அதன் செயல்பாடுகள் குறித்து, மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக் மூலம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா , அண்மையில் செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மூலம் தங்கள் நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்த மெட்டா செயல்பட்டு கொண்டிருக்கிறது.
இதுகுறித்து, மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் நேற்று (வியாழக்கிழமை) பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில், மெட்டாவின் புதிய செயற்கை நுண்ணறிவு AI ஆராய்ச்சி, அதற்கான ஆய்வகங்கள், புதிய தரவு மையங்கள் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.
மெட்டாவின் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி அலெக்சிஸ் பிஜோர்லின் கூறுகையில், AI தொழில்நுட்ப பயன்பாடுகளை உருவாக்குவது முதலீடு அதிகம் என்றாலும், சிஎன்பிசி அறிக்கையின்படி, மேம்பட்ட செயல்திறன் படி முதலீட்டை நியாயப்படுத்துகிறது என்று நிறுவனம் நம்புகிறது. இந்த ஆய்வுகளில் ஏற்படும், அதிகப்படியான வெப்பத்தை குறைக்க திரவ குளிரூட்டல் போன்ற ஆற்றல்-திறனுள்ள தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை அளிக்க மெட்டா அதன் தரவு மைய வடிவமைப்புகளை புதுப்பித்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மார்க் ஸூகர்பர்க் வெளியிடப்பட்ட பதிவில், மெட்டாவின் Meta Training and Inference Accelerator (MTIA) சிப் ஆனது குடும்ப சில்லுகளில் முதன்மையானது, இது பல்வேறு AI-சார்ந்த பணிகளுக்கு உதவ வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப MTIA சிப், பயிற்சி பெற்ற AI மாதிரியால் செய்யப்பட்ட கணிப்புகள் அல்லது செயல்களை உள்ளடக்கிய அனுமானத்தின் அடிப்படையில் செயல்பட உள்ளது.
இந்த சிப்பானது பயனர்களின் அளிக்கும் தரவுகள் அடிப்படையில் உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்களைக் காண்பிக்கப் பயன்படுத்தப்படும் மெட்டாவின் சில பரிந்துரை செயல்பாட்டிற்கு (நாம் தேடுவதை வைத்து விளம்பரம் வரும்) AI அனுமானம் சிப் கூடுதல் சக்தி அளிக்கிறது.
தரவு மைய சில்லுகளை உருவாக்குவதில் மெட்டாவின் கவனம் இருக்கிறது. ஆன்லைன் சேமிப்பு கிடங்கு (கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகள்) வழங்கும் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களிலிருந்து இந்த சிப் வேறுபட்டது. இதன் விளைவுகளை பற்றி மெட்டா உணரவில்லை. இருப்பினும், தங்கள் நிறுவனத்தின் சமீபத்திய செயல்பாடு அந்நிறுவனத்தின் முயற்சிகளில் வளர்ந்து வரும் ஆர்வத்தை காட்டுகிறது.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…