Samsung Galaxy F54 5G [Image source: file image ]
ஸ்மார்ட் போன்களில் பலரும் விரும்பி உபயோகம் செய்யக்கூடிய போன் என்றால் சாம்சங் கேலக்ஸி (Samsung Galaxy) என்று கூறலாம். தற்போது, சாம்சங் நிறுவனம் தனது எஃப் சீரிஸில் அடுத்த மாடலான கேலக்ஸி எஃப்54 5ஜி ஸ்மார்ட் ஃபோனை, இந்தியாவில் வெளியிட உள்ள தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜூன் 6 ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது, இந்நிலையில் வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக, வரவிருக்கும் சாம்சங் 5G தொலைபேசியின் விலை மற்றும் விவரக்குறிப்புகள் இணையத்தில் கசிந்துள்ளது.
புதிய ‘Samsung Galaxy F54 5G’ போன் இந்தியாவில் ரூ.28,499 ஆரம்ப விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சாம்சங் இரண்டு விலைகளில் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. ஸ்டோரேஜின் மாறுபாடு படி, விலையும் மாறுபடும். ஜூன் 6 ஆம் தேதி சாம்சங் தனது புதிய 5G ஃபோனை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் போது தான் விலைப் பற்றி தெளிவு வரும்.
முன்பதிவு:
சாம்சங் கேலக்ஸி எஃப்54 5ஜி மாடலுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. Flipkar மற்றும் Samsung அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பயனாளர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். குறைந்தபட்சம் 999 ரூபாய் செலுத்தி பயனர்கள் செல்போனை முன்பதிவு செய்யலாம் எனவும், அவ்வாறு முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.2000 சலுகைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி…
சென்னை : தமிழ்நாடு காவல்துறையில் 33 ஐ.பி.எஸ்.உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு இன்று (ஜூலை 14, 2025)…
கடலூர் : கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் இரயிலில் பயணம் மேற்கொண்டார்.…
சென்னை : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம்,…
சவுத்எண்ட் : லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் நேற்றைய தினம் (ஜூலை 13) மாலை 4 மணியளவில் ஒரு சிறிய…
சென்னை : நாகப்பட்டினம் மாவட்டம் விழுந்தமாவடியில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த 'வேட்டுவம்' படப்பிடிப்பின்போது, நேற்றைய தினம் (ஜூலை 13)…