Photo Credit: Samsung Galaxy M15 5G Stone Gray variant
Samsung Galaxy M15: சாம்சங் நிறுவனம் தனது Galaxy M15 5G ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது.
சாம்சங் நிறுவனம் தனது M சீரிஸில் அடுத்த மாடலான Samsung Galaxy M15 5G ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தனித்துவமான வடிவமைப்பைக் கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். Galaxy M15 5G -இன் வடிவமைப்பு மற்றும் ஹார்ட்வேர் விவரங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் வெளியான Galaxy A15 5G ஐப் போலவே உள்ளன.
இந்த ஸ்மார்ட்போனானது 6.5-இன்ச் முழு-HD+ (1,080×2,340 பிக்சல்கள்) Super AMOLED டிஸ்ப்ளே மற்றும் 90Hz ரெப்ரெஷ் ரேட்டை கொண்டுள்ளது. டிஸ்ப்ளேயில் செல்ஃபி ஷூட்டரை வைக்க, வாட்டர் டிராப்-ஸ்டைல் நாட்ச் உள்ளது.
Galaxy M15 5G ஆனது 50-மெகாபிக்சல் முதன்மை கேமரா மூலம் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.கேமரா யூனிட்டில் 5 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஷூட்டர் ஆகியவை அடங்கும். செல்ஃபிகள் மற்றும் வீடியோக்களுக்கு, 13 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி-யின் ஆரம்ப விலை 4ஜிபி ரேம் + 128ஜிபி ரோம் ரூ.12,999 ஆகவும், 6ஜிபி ரேம் + 128ஜிபி ரோம் ரூ. 14,499 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ஸ்மார்ட்போன் ப்ளூ டோபஸ், செலஸ்டியல் ப்ளூ மற்றும் ஸ்டோன் கிரே ஆகிய மூன்று நிறங்களில் வெளிவந்துள்ளது. HDFC கார்டை பயன்படுத்தி வாங்கும் போது ரூ.1,000 தள்ளுபடி வழங்கபடுகிறது.
புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…
பெங்களூர் : இந்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கை நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான அட்டவணையை ஐ.சி.சி அறிவித்துள்ளது.…
மதுரை : தமிழ்நாடு பிரீமியர் லீக்தொடரில் சீனியர் வீரரான அஸ்வின் நிதானமிழந்து செய்த காரியங்களுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்த…
ஈரான் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டமிட்டுள்ளது.…
சென்னை : ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த…
சென்னை : திருவள்ளூரில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சகோதரரை கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாகி இருந்த புரட்சி பாரதம் கட்சியின்…