Termination of employees [FILE IMAGE]
அமேசானின் லைவ் ஸ்ட்ரீமிங் தளமான ட்விட்ச் நிறுவனம் தற்போது லாபமின்மை காரணமாக 35% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. சமீபகாலமாக பல நிறுவனங்களை தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வரிசையில் ட்விட்ச் நிறுவனம் இணைந்துள்ளது.
கடந்த 2023 -ஆம் ஆண்டு ட்விட்ச் தலைமை வாடிக்கையாளர் அதிகாரி மற்றும் தலைமை உள்ளடக்க அதிகாரி உட்பட பல உயர் நிர்வாகிகள் அந்த நிறுவனத்திலிருந்து தங்களுடைய பதவிகளில் இருந்து விலகினார்கள். இவர்கள் பதவிகளில் இருந்து விலகிய பிறகு ட்விட்ச் நிறுவனம் தங்களுடைய வருவாயை இழந்ததாக கூறப்படுகிறது.
1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பேடிஎம்! காரணம் இது தான்…
எனவே, நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதால், 500 ஊழியர்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார்கள். கடந்த 2023 -ஆம் ஆண்டு 25,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களை அமேசான் பணிநீக்கம் செய்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதத்தில் ட்விட்ச் நிறுவனம் 35% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ட்விட்ச் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டான் க்ளான்சி தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் இது குறித்து கூறியதாவது ” இன்று எங்கள் பணியாளர்களின் அளவைக் குறைக்க நாங்கள் கடினமான முடிவை எடுத்துள்ளோம். இந்த தகவலை உங்களுக்குத் தெரிவிக்கவும் நான் விரும்புகிறேன்” என்று அறிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்ச் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டதாவது “திடீரென பணிநீக்கம் குறித்து அறிவிப்பை வெளியீட்டுள்ளதால் என்ன நடக்கிறது என்று உங்களில் பலர் ஆச்சரியப்படுவது எனக்கு தெரிகிறது. ட்விட்ச் நீண்ட காலத்திற்கு இருக்கும் வகையில், ஒரு நிலையான வணிகத்தை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். எனவே செலவுகளைக் குறைத்து பலவற்றைச் மேம்படுத்தவேண்டும் என்று இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்., நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகவும், அதனால் 500 ஊழியர்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளோம் என அறிவித்துள்ளனர்.
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…