தன்னை போலவே இருக்கும் AI மாடல்.! அதிர்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின்.!

Published by
செந்தில்குமார்

AI தொழில்நுட்பம் பல துறைகளில் சாதனைகளைப் படைத்திருந்தாலும், சில இடங்களில் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. அதிலும் டீப்ஃபேக் (Deep fake) என்ற AI தொழில்நுட்பம் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த ஏஐ, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தெரிகிற ஒருவரின் முக ஜாடையை அப்படியே மற்றொருவரை போல மாற்றிவிடும் திறனை கொண்டுள்ளது.

டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பல பிரபலங்களின் டீப்ஃபேக் விடீயோக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ரஷ்யாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பொதுமக்களுடனான செய்தியாளர் சந்திப்பின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடன் செயற்கை நுண்ணறிவு மற்றும் அதன் ஆபத்துகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் புதினிடம் இந்த கேள்வியைக் கேட்டது, அவரைப் போலவே தோற்றம் மற்றும் அவரைப்போன்ற குரலைக் கொண்ட AI மாடல் ஆகும். அந்த ஏஐ மாடல் வீடியோ வாயிலாக புதினைத் தொடர்புக்கொண்டது. இந்த புதிய வீடியோ சமீக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

புதினிடம் கேள்வி கேட்ட அந்த AI மாடல், தன்னை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவன் என அறிமுகம் செய்து கொண்டது. பிறகு “உங்களிடம் நிறைய இரட்டையர்கள் இருப்பது உண்மையா? செயற்கை நுண்ணறிவு மற்றும் நியூரல் நெட்வொர்க்குகள் நம் வாழ்வில் கொண்டு வரும் ஆபத்துகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டது.

அதற்கு பதிலளித்த விளாடிமிர் புதின், “நீங்கள் என்னைப் போலவும் என் குரலில் பேசுவதையும் நான் பார்க்கிறேன். ஆனால் ஒரு நபர் மட்டுமே என்னைப் போல இருக்க வேண்டும். என் குரலில் பேச வேண்டும். அது நானாக இருக்க வேண்டும். சொல்லப்போனால், இதுதான் என்னுடைய முதல் இரட்டை.” என்று கூறினார்.

முன்னதாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின், மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாகவும், மாஸ்கோவிற்கு வடக்கே வால்டாயில் உள்ள அவரது இல்லத்தில் இரவு உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. அந்த நேரத்தில் புதினை போல தோற்றமளிக்கும் ஒருவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

“கீழடி.., பாஜகவின் புராணக் கதைகள் அல்ல” – விஜய் கடும் விமர்சனம்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…

1 hour ago

“இது என்னுடைய நேரம்.., நான் என்னை மாற்றிக் கொள்ளவில்லை” – நடிகர் அஜித்குமார்.!

சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…

2 hours ago

டாஸ்மாக் வழக்கு: ”அமலாக்கத்துறை ஆவணங்கள் போதுமானது அல்ல” – ஐகோர்ட் அதிரடி உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…

2 hours ago

”ஈரான் ஒருபோதும் சரணடையாது”- அமெரிக்க அதிபருக்கு ஈரான் தலைவர் கடும் எச்சரிக்கை.!

இஸ்ரேல் : ஈரானின் ஏவுகணை தாக்குதல்களால் இஸ்ரேலிய மக்கள் பதுங்குமிடங்களில் தங்கியுள்ளனர். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் இறங்கி ஈரானை…

3 hours ago

சாகித்ய அகாடமி விருதுகள்: விஷ்ணுபுரம் சரவணனுக்கு சாகித்ய பால புரஸ்கர் விருது அறிவிப்பு.!

டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில்…

3 hours ago

இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு.., சென்னை ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்த ரத்து.!

சென்னை : சென்னை - டெல்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டது.  அதன்படி, இரவு…

3 hours ago