பாகிஸ்தானில் கல்குவாரியில் பாறை சரிந்ததில் 22 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் உள்ள கைபர் பக்துங்வா மாகாணம் மொஹமண்ட் மாவட்டத்தில் பளிங்கு கல் குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல இதில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென பெரிய பாறை ஒன்று சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்ததால் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அதில் சிக்கிக்கொண்டனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் பாறைகளை அகற்றி மீட்பு பணிகளை ஆரம்பித்தனர். இதுவரை 22 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது எனவும் மேலும் 15 முதல் 20 பேர் வரை இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் எனவும் தெரிகிறது என மீட்பு படையினர் கூறியுள்ளனர். மேலும் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகிறது உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக…
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…
சென்னை : 2026 தேர்தலில் வென்று ஆட்சியமைத்தால், அதிமுகவில் இருந்து முதல்வர் வருவார் என்று அமித்ஷா கூறியது பேசுபொருளாகியுள்ளது. முதல்வராக…
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…