தாதா சாகேப் பால்கே விருதினை இயக்குனர் பாரதிராஜாவுக்கு வழங்க வேண்டும் என வெற்றிமாறன், பாலா, கமல்ஹாசன்,தனுஷ், பார்த்திபன் என 33 திரைபிரபலங்கள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்திய சினிமாவின் மிக முக்கிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது வருடா வருடம் இந்திய சினிமாவில் சிறப்பாக செயல்பட்டு வந்த திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும்.
அந்த வகையில், இந்த வருட தாதா சாகேப் பால்கே விருதை இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு வழங்க வேண்டும் என இயக்குனர்களான வெற்றிமாறன், பாலா, ப்ரியதர்சன், நடிகர்களான கமல்ஹாசன்,தனுஷ், பார்த்திபன் தயாரிப்பாளர்களான கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.ஆர்.பிரபு என 33 திரைபிரபலங்கள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில் , இயக்குனர் பாரதிராஜா சுமார் 45 வருடங்களாக இந்திய சினிமாவில் பல அற்புதமான படைப்புகளை கொடுத்துள்ளார். சாதி பிரச்சனை, தீண்டாமை, வேலையின்மை, பெண் உரிமைகள் என பல சமுக கருத்துள்ள திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் நல்ல நடிகராகவும் வலம் வருகிறார். என்பனவாறு அந்த ஆதரவு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2018ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருது பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு வழங்கப்பட்டது.
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர் தாக்குதலால் உயிரிழந்த மற்றொரு அஜித்குமார் என்பவரின் குடும்பத்தினருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்று தொலைபேசி…