கஜகஸ்தான் நாட்டில் உள்ள இராணுவ தள ஆயுதக்கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது, இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கஜகஸ்தான் நாட்டின் ஜம்லி மாகாணம் பைசக் மாவட்டத்தில் ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தில் உள்ள ஆயுத கிடங்கில் வெடி பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று திடீரென இந்த ராணுவ தளத்தில் சத்தத்துடன் கூடிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தால் ராணுவ தளம் முழுவதிலும் தீ பரவியுள்ளது.
இந்த தீ பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவ தொடங்கியதை அடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்ட நிலையில், காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், இந்த விபத்தில் காயமடைந்த 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…