நூடுல்ஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழப்பு.!

Published by
murugan

வடகிழக்கு சீன மாகாணமான ஹிலோங்ஜியாங்கில் ஒரு வருடமாக பிரீசரில் (freezer) வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் வீட்டில் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ் சூப்பை சாப்பிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். அக்டோபர் 5 ஆம் தேதி காலையில் ஒரே குடும்பத்தை சார்ந்த 12 பேர் காலை உணவாக புளித்த சோள மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட அடர்த்தியான நூடுல்ஸ் சாப்பிட்ட சில மணி நேரங்களிலேயே உயிரிழந்தனர்.

அவர்களில் ஏழு பேர் அக்டோபர் 10-ம் தேதி இறந்ததாகவும், எட்டாவது மரணம் இரண்டு நாட்களுக்கு முன்பாகவும், கடைசியாக உயிரிழந்தவர் கடந்த திங்கள்கிழமை இறந்தார் என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீன சுகாதார ஆணையம் திங்களன்று ஒரு தேசிய எச்சரிக்கையை வெளியிட்டது. அதில், வீட்டில் தயாரிக்கப்பட்ட சூப் நூடுல்ஸ் ஒரு வருடமாக பிரீசரில் ஒன்றில் வைக்கப்பட்டு இருந்ததால் அதை சாப்பிடுவதற்கு முன்பு மோசமாகிவிட்டது.

அதை சாப்பிட்டதால் உயிரிழந்துள்ளனர். புளித்த மாவில் இருந்து உணவு தயாரிப்பதை அல்லது சாப்பிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியது.

புளித்த மாவு மற்றும் அரிசி பொருட்களிலிருந்து போங்க்கிரெக்கி என்ற நச்சு அமிலம் உருவாகும். இது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது, நன்கு சமைத்தாலும் அதை அகற்ற முடியாது என்று சீனாவின் வேளாண் பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ஃபேன் ஜிஹோங் தெரிவித்தார்.

போங்க்ரெக்கிக் அமிலத்தால் பாதிக்கப்பட்ட உணவை உட்கொள்வது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் விஷத்தை ஏற்படுத்தி மரணத்திற்கு கூட வழிவகுக்கும், இறப்பு விகிதம் 40 முதல் 100 சதவீதம் வரை அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan
Tags: noodles

Recent Posts

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

26 minutes ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

45 minutes ago

பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நினைவு தின பேரணி!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…

1 hour ago

உக்ரைன் மீது ரஷ்யா மிகப் பெரிய தாக்குதல் வான்வழித் தாக்குதல்.!

கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…

1 hour ago

இங்கிலாந்து அணி ஆல் அவுட்.., 3ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 244 ரன்கள் முன்னிலை.!

பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…

2 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

16 hours ago