கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்து வைக்க கோரி முஸ்லீம் இளைஞர் பெண்ணின் பெற்றோரிடம் கேட்க, அதனை மறுத்ததால் பெண்ணை கொலை செய்துள்ளார்.
பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்து வைக்க கோரி அவரது பெற்றோரிடம் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கேட்டுள்ளார் . ஆனால் அதனை அந்த பெண்ணின் பெற்றோர்கள் நிராகரித்ததை அடுத்து முஸ்லீம் இளைஞர் கிருஸ்துவ பெண்ணை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.
சோனியா என்ற கிருஸ்துவ பெண்ணை மூஸ்லீம் இளைஞரான ஷெஜாத் என்பவர் திருமணம் செய்து வைக்க கோரி சோனியாவின் பெற்றோரிடம் கேட்டுள்ளார். அவருடன் ஷெஜாத்தின் தாயாரும் கேட்டுள்ளார். ஆனால் பெண்ணின் பெற்றோர்கள் அவரது திருமண ஆசையை நிராகரித்துள்ளனர். அதனையடுத்து பெண்ணை ஃபைசான் என்ற இளைஞனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
சம்பவம் நடந்த நாளன்று ஃபைசனுடன் சாலையில் சென்று கொண்டிருந்த பெண்ணை ஷெஜாத் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார். அதனையடுத்து ஷெஜாத் அங்கிருந்து தப்பி சென்றதாகவும், பெண்ணினுடன் இருந்த ஃபைசானை ராவல்பிண்டியில் உள்ள கோரல் காவல் நிலைய அதிகாரிகள் கைது செய்ததாகவும் கூறப்படுகிறது. விரைவில் முக்கிய குற்றவாளியான ஷெஜாத்தை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
டெல்லி : வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ள விஜய் மல்லையாவை…
பெங்களூரு : சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மறு…
விழுப்புரம் : கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது…
சென்னை : சிங்கப்பூர், ஹாங்காங்கில் பரவி வந்த கொரோனா தற்போது இந்தியாவிலும் வேகமெடுக்கிறது. இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும்…
டெல்லி : இந்தியாவின் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற லெக் ஸ்பின்னர் பியூஷ் சாவ்லா இன்று அனைத்து வகையான…
மும்பை : ஒரு ஆட்டோ ஓட்டுநர் ஒரு மாதத்தில் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? ஆனால், மும்பையைச்…