மாடு கடத்தல் கும்பலால் தாக்கப்பட்ட இராணுவ வீரர்! ராணுவ வீரரின் உடல் நாளை தமிழகம் வருகை !

Published by
லீனா

மாடு கடத்தல் கும்பலால் தாக்கப்பட்ட இராணுவ வீரர் நாளை தமிழகம் வருகை.

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த பங்கிராஜின் மகன் மணிகண்டன்(26). இவர் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பதாகவே துணை ராணுவ பிரிவில் (எஸ்எஸ்சி) பணியில் சேர்ந்து பீகார் மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார். 

இவர் கடந்த மார்ச் 7-ம் தேதி, இரவு 8 மணியளவில், தாகூர்கன்ஞ் மாவட்டம் பீகார் – நேபாளம் எல்லையில் உள்ள , கக்கட்டியா சோதனை சாவடியில், இரவு நேரத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவருடன் மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இதனையடுத்து, அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்ட  போது, வாகனத்தில் மாடுகள் கடத்தி வரப்பட்டதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, இதுகுறித்து மணிகண்டன் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க முற்பட்ட போது, மணிகண்டனையும், உடனிருந்த ராணுவ வீரர்களையும், மாடுகடத்தல் கும்பல் தாக்கியுள்ளனர். 

இதில் படுகாயமடைந்த ராணுவ வீரர் மணிகண்டன், சிலிகுரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மணிகண்டன் சிகிச்சை பலனின்றி கடந்த 5-ம் தேதி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, மணிகண்டனின் உடல் திருவனந்தபுரம் வழியாக கொண்டு வரப்பட்டு, நாளை காலை முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது. 

Published by
லீனா

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

9 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

10 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

11 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

11 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

13 hours ago