ஆயுர்வேத படி தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் எந்த உணவுகளை உண்ண வேண்டும்.!

Published by
கெளதம்

பெண்களின் பாலூட்டும் சக்தியை இயற்கையாக அதிகரிக்க நீங்கள் உட்கொள்ளக்கூடிய சில ஆரோக்கியமான உணவு பொருட்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தாய்ப்பாலை நன்றாகக் குடித்து வளர்ந்த குழந்தைகள், பிற்காலத்தில் பெரும் பாரத்தைத் தாங்கும் அளவுக்கு உறுதிபெறுவார்கள். குறைந்த ஊட்டச்சத்து, ஹார்மோன் தொந்தரவு போன்ற சில காரணங்களால், சிலருக்குத் தாய்ப்பால் தேவையான அளவு சுரப்பதில்லை.

இந்நிலையில், கீழ்க்காணும் உணவுமுறையை பின்பற்றுவதன் மூலம் தாய்ப்பாலை பெருக்கலாம். குறைந்த பால் உற்பத்தியால் அவதிப்பட்டு, புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது கடினம் எனில் அவர்களுக்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சில வழிகள் உதவியாக இருக்கலாம்.

Shatavari

சதாவரி:

அஸ்பாரகஸ் தாவரத்தின் ஒரு வகை தான் சதாவரி, இது ஆயுர்வேதத்தில் நன்கு அறியப்பட்ட மூலிகையாகும். பெண் இனப்பெருக்க அமைப்பை ஆரோக்கியமாக மாற்றுவது மட்டுமில்லமால் இந்த ஆயுர்வேத மூலிகை தாய்ப்பால் திறனையும் அதிகரிக்கிறது.

இஞ்சி மற்றும் பூண்டு:

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலிருந்து பல நோய்களில் இருந்து காப்பாற்றுவது வரை இஞ்சி மற்றும் பூண்டு தங்களது பங்கை வகுக்கிறது. குழ்நதை பெற்ற தாய்மார்கள் பொதுவாக குழந்தை பிறந்த பிறகு முதல் மாதத்திற்கு இஞ்சி மற்றும் பூண்டு சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். தாய்ப்பால் சீராக உற்பத்தி ஆக  இவை இரண்டும் அவசியமாக இருக்கிறது.

பெருஞ்சீரகம்:

குழந்தை பெற்ற தாய்மார்கள் சிலருக்கு பால் சுரப்பு சில சமயங்களில் குறைந்து விடும். தாய்பால் சுரப்பை அதிகரிக்க பாலூட்டும் தாய்மார்கள் பெருஞ்சீரகத்தை அவ்வப்போது சேர்த்து கொள்வது நல்லது. இதிலுள்ள ‘அனீதோல்’ எனப்படும் வேதிப்பொருள், பெண்களில் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை தூண்டி தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது.

இலவங்கப்பட்டை:

இலவங்கப்பட்டை மற்றொரு பிரபலமான மூலப்பொருள் ஆகும். போதிய தாய்ப்பால் இல்லாமல் இருக்கும் பெண்கள் இதை அதிகம் எடுத்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும். சிறிது இலவங்கப்பட்டையை எடுத்துக் கொண்டு சுடு தண்ணீரில் போட்டு தேன் கலந்து பருகி வர, தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

பாதாம் பருப்பு

இரவில் நான்கு ஐந்து பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊற வைத்து, அடுத்த நாள் அந்த பாதம் பருப்புகளை உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதைத் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு பெண்களின் உடல் வலிமையும் அதிகரிக்கும்.

Published by
கெளதம்

Recent Posts

INDvsENG : “நானும் சதம் அடிப்பேன்”…தோனி சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…

4 hours ago

இஸ்ரேலுடன் அமெரிக்காவும் போரில் இறங்கினால் எல்லாருக்கும் ஆபத்து! ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை!

ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…

5 hours ago

ஆசை இருக்கு கண்டிப்பா திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்போம்! துரை வைகோ பேச்சு!

திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…

6 hours ago

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை!

அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…

6 hours ago

ஜூன் 27 வரை மழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…

7 hours ago

“என் குழந்தைகளுக்கு ஹனுமான்தான் தெரியும்.. ஸ்பைடர் மேன்-சூப்பர் மேன் தெரியாது” – நமீதா பெருமிதம்!

சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…

8 hours ago