விஜயின் எதிர்காலம் குறித்து தான் யோசிப்பது தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாகவும், தன்னை போல தந்தை கிடைப்பது பெரிய விஷயம் எனவும் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் விஜய் பெயரில் கட்சி துவங்க இருப்பதாக அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அறிவித்த நிலையில், இது குறித்து பல சர்ச்சைகள் எழும்பியது. இதையடுத்து விஜய் தனக்கும் அந்த கட்சிக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறி ஒதுங்கி இருந்த நிலையில், தற்போது இது குறித்து பேசி உள்ள விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள், தான் கட்சி தொடங்குவது விஜய்க்காக தான் எனவும், அது அவருக்கு ஒருநள் புரியும் எனவும் கூறியுள்ளார்.
ஆனால் தற்போது யாரோ அவரை குழப்பி வருவதால் தான் இவ்வாறு அவர் நடந்துகொள்கிறார் எனவும் தெரிவித்த அவர், இதன்மூலம் விஜய்க்கு ஒரு அரசியல் அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுக்க உள்ளதாகவும், மற்றபடி இந்த வயதில் தேர்தலில் போட்டியிட்டு பதவியை பிடிக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் விஜய்யின் எதிர்காலத்தைக் குறித்து யோசிப்பது தவறாக புரிந்து கொள்ளப்படுவதாகவும், தன்னை போல தந்தை கிடைப்பது பெரிய விஷயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…