தனக்கு திருமணம் நடக்க இன்னும் சில காலம் உள்ளது என்று நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். தற்போது இவர் தமிழில் சாணிக் காயிதம், அண்ணாத்த, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி 4 தெலுங்கு படங்களிலும் ,2 மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை கீர்த்தி சுரேஷிற்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் பரவியது அதனை தொடர்ந்த்து நடிகர் கீர்த்தி சுரேஷிற்கும் இசையமைப்பாளர் அனிருத்திற்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. இதுகுறித்து இரண்டு தரப்பிலும் வதந்தி என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ் இதுகுறித்து கூறுகையில், “எனக்கு திருமணம் நடைபெறவுள்ளதாக பரவி வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. சில இணையதளங்களில் நான் திருமணம் நான்கு முறை வெவேறு நபர்களுடன் திருமணம் நடைபெறவுள்ளதாவும் வதந்தி செய்திகள் பரவியது. இது போன்ற செய்திகளை பரப்ப வேண்டாம். எனது திருமணம் நடக்க இன்னும் சில காலங்கள் உள்ளது” என்றும் கூறியுள்ளார்.
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…