ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்.
நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாபியா, களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார். மேலும் இவரது நடிப்பில் குருதி ஆட்டம்,காதலில் சந்திப்போம், கசட தபற, பொம்மை, ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
தற்போது இந்தியன் 2, ருத்ரன், ஓ மண பெண்ணே போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தை பூலோகம் படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்குகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பை சென்னையில் வைத்து எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…
சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…
விருதுநகர் : ஊட்டி, கொடைக்கானல் என பிரபல சுற்றுலாத் தலங்களை எல்லாம் ஓரம்கட்டி விட்டுத் திடீரென கூமாபட்டி கிராமம் வலைத்தளங்களில்…
சென்னை : தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், அதிமுக…
சென்னை : தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது. கட் ஆஃப் மதிப்பெண், இட…