லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்க 4 கோடி சம்பளம் வாங்கும் ஆதி..?

Published by
பால முருகன்

லிங்குசாமி படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் ஆதிக்கு 4 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல்

தமிழில் ரன், சண்டக்கோழி, பையா, அஞ்சான் உள்பட பல வெற்றிப் படங்களை இயக்கியும் , தயாரித்தும் வந்த லிங்குசாமி கடைசியாக சண்டைக்கோழி-2 படத்தினை இயக்கியிருந்தார். அதன் பின் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை.

இந்த நிலையில், இயக்குனர் லிங்குசாமி அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் ஹீரோவாக பிரபல தெலுங்கு நடிகரான ராம் பொதினேனி நடிக்க உள்ளார் என்றும், இந்த படத்தை ஸ்ரீனிவாசா சித்தூரி என்பவர் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது.

அதனை தொடர்ந்து படத்திற்கு இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைப்பதாவும், ராம் பொதினேனிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக அடுத்ததாக அறிவிப்பு வெளியானது.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று இந்த படத்தில் ஆதி இணைந்தார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க 4 கோடி சம்பளம் பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்தில் வில்லன் கதாபாத்திரம் முக்கியமான கதாபாத்திரம் என்பதால் நடிகர் ஆதி வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மிருகம் படம் மூலம் பிரபலமான ஆதி  அய்யனார், ஆடுபுலி, ஈரம், அரவான், யூ டர்ன், உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தமிழில் 2 படங்களிலும், தெலுங்கில் 2 படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

தடை செய்தாலும் மீண்டும் வருவோம்.! பெயரை மாற்றி சேவையை தொடரும் ரேபிடோ – உபர்.!

கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…

1 hour ago

”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!

டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…

1 hour ago

அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…

3 hours ago

”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!

சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…

3 hours ago

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…

4 hours ago

அகமதாபாத் விமான விபத்து: மருத்துவ விடுதியில் மாணவர்கள் உயிர் தப்பிய காட்சி.!

குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…

4 hours ago