இடிமுழக்கம் படத்தில் ஜிவி பிரகாஷிற்கு அம்மாவாக நடிகை சரண்யா பொன்வண்ணன் நடிக்கிறார்.
நீர்ப்பறவை, தர்மதுரை போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குனர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் இன்னும் ரிலீசாகாமல் இருக்கிறது. இதில் மாமனிதன் திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இதனை தொடர்ந்து தற்போது இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமாரை நாயகனாக வைத்து இடிமுழக்கம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் ஹீரோயினாக நடிகை காயத்ரி நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநாதன் இசையமைத்து வருகிறார். ஆக்சன் கதைக்களமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் விறு விறுவென நடந்து வருகிறது.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் பிரபல நடிகையான சரண்யா பொன்வண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்தில் ஜிவி பிரகாஷிற்கு அம்மாவாக நடிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்பு நடிகை சரண்யா பொன்வண்ணன் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான “தென்மேற்கு “நீர்ப்பறவை”, “பருவக்காற்று” ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் “தென்மேற்கு பருவக்காற்று” படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…