aishwarya rai [File Image]
சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பற்றி வதந்தியான தகவல்கள் பரவுவதும் அதன்பிறகு அந்த வதந்தி குறித்து அந்த பிரபலங்களும் விளக்கம் அளிப்பது உண்டு. அந்த வகையில், கடந்த சில நாட்களாகவே ஐஸ்வர்யா ராய் மற்றும் அவருடைய கணவர் அபிஷேக் பச்சனுக்கும் விவகாரத்து ஆகிவிட்டதாக பரபரப்பான செய்தி வெளியாகி இருந்தது.
இந்த தகவலை பாலிவுட் சினிமாவில் தன்னுடைய தகவலை மூலம் சர்ச்சையை கிளப்பி விடும் உமர் சந்த் தான் கூறிருந்தார். அபிஷேக் பச்சன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது அவருடைய கையில் மோதிரம் இல்லை எனவே அவருடைய விவாகரத்து செய்தி உண்மை தான் என்று புகைப்படங்களை வெளியீட்டு சிலர் தகவலை பரப்பி வருகிறார்கள்.
நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கு விவாகரத்தா? பரபரப்பை கிளப்பிய செய்தி!
இது ஒரு புறம் இருக்க மற்றோரு புறம் நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய மகள் ஆராத்யாவுடன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டு மகளுடன் இணைந்து கொண்டு எந்த கவலையும் இல்லாமல் நடனம் ஆடி கொண்டு இருந்தார். எனவே, இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடந்திருந்தால் எதற்காக ஐஸ்வர்யா ராய் அவருடைய மகளுடன் இணைந்து நடனம் ஆட போகிறார்? என்ற கேள்வியும் ஒரு பக்கம் எழுந்தது.
இருந்தாலும் இவருடைய விவாகரத்து செய்தி கொஞ்சம் கூட ஓயவில்லை எனவே, இந்த செய்தி பெரிய அளவில் வைரலானதால் இதை பற்றி ஐஸ்வர்யா ராய் அல்லது அபிஷேக் பச்சன் இருவரில் யாரவது விளக்கம் கொடுப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது இதனை பற்றி பேசி விளக்கம் அளிக்காமல் தங்களுடைய செயல் மூலமே விளக்கம் அளித்துள்ளனர்.
அதன்படி, விவாகரத்து வதந்தி செய்தி வைரலானதை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொன்டுள்ளார். இதனால் இவர்களுடைய விவாகரத்து செய்தி முற்றிலும் வதந்தியான ஒரு தகவல் என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. மேலும், ஐஸ்வர்யா ராய் பிரபல பாலிவுட் நடிகரான அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.2011-ஆம் ஆண்டு முதல் பெண் குழந்தை ஆராத்யாவை பெற்றுக்கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சாவூர் : கடந்த ஜூன் 13ம் தேதி டெல்டா பாசனத்துக்காகமேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கல்லணையை வழக்கமாகத் திறக்கும் தேதி…
சென்னை : விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா மாநிலம், புனே அடுத்த குந்தமாலாவில் பிரசித்தி பெற்ற இந்திரயாணி ஆற்றுப்பாலம் உள்ளது. பழமை வாய்ந்த ஆற்றுப்பாலத்திற்கு…
சென்னை : சென்னையில் உள்ள அண்ணா நகரில் பார்க்கிங் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், அதற்கு தீர்வு காண ஸ்மார்ட்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மூன்றாவது நாளாக மோதல் தொடர்கிறது. இதில் இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று ட்ரோன் தாக்குதல்களை…
குஜராத் : அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர்…