திருமணம் என்பது உலகம் முழுவதும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இனிமையான நிகழ்வாக இருக்கலாம். ஆனால் அதில் குறிப்பிடும் சில பழக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளும் நம்மை ஆச்சரியமடையை செய்கிறது.பெரும்பாலான இந்திய குடும்பங்களில் பாரம்பரிய அணுகுமுறை என்பது இன்றும் பின்பற்றப்பட்டு வருகிறது.
திருமணம் ஆன புதிய தம்பதிகளான மணமகன் மற்றும் மணமகளும் ஒன்றாகக் கழிக்கும் முதல் இரவில் கூட நிறய பாரம்பரிய மூடநம்பிக்கைகள் உள்ளது. ஆச்சிரியமான சில முதல் இரவு பழக்கங்கள் மற்றும் மூடநம்பிக்கைகள் உள்ளது.
திருமணத்தைக் பொறுத்தவரையில் முதல் இரவிற்கு பல மடங்கு மூட நம்பிக்கைகள் உள்ளது. இந்த மூடநம்பிக்கைகள் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு விதமான மூடநம்பிக்கைகள் உள்ளது. அதில் மேற்குநாடுகளில் முதல் இரவு அன்று தலையணைக்கு அடியில் லிம்பர்க் சீஸ் வைத்தால் அதிக குழந்தைகள் பிறக்க வழிவகுக்கும் என்று நம்புகிறார்கள்.
மேலும் முதல் இரவு அன்று முதலில் தூங்குபவர்கள் முதலில் இறந்து விடுவார்கள் என்று ஒரு மூடநம்பிக்கை பரவலாக உள்ளது. அடுத்ததாக மலர் அலங்காரம் முதல் இரவு அன்று அறையை சுற்றி வாசனையான மலர்கள் கொண்டு அலங்கரிப்பது போன்ற விஷயங்கள் பல காலமாக இருக்கும் பழக்கமாகும். ஏனெனில் இவை ஒரு கவர்ச்சியான நறுமணத்தைக் கொடுக்கிறது மேலும் அவை தம்பதியினருக்கு ஒரு பாலுணர்வை ஏற்படுத்தும் என்று நம்பபட்டு கடைபிடிக்கப்படுகிறது.
புதுசாக திருமணமான தம்பதிகளுக்கு பாரம்பரியமாக ஒரு கிளாஸ் பால் கொடுக்கப்படுகிறது. பாலில் நொறுக்கப்பட்ட பாதாம் மற்றும் மிளகு கலக்கப்படுகிறது. இது தம்பதிகளின் பாலுணர்வை அதிகரிக்குமாம்.
திருமணமான தம்பதினர் வெள்ளை பெட்சீட்டில் உறங்குவது வழக்கம்.பெண்களின் கன்னித்தன்மைக்கு இந்து மதத்தில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. முதல் இரவு படுக்கையில் வெள்ளை விரிப்புகளில் தூங்குவதினால் அதில் ஏற்படும் கரை மணப்பெண்ணின் கன்னித்தன்மைக்கு சான்றாக கூறப்பட்டது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…