கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் உள்ள நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதனை கட்டுப்படுத்த பலவேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன. இந்த வைரஸ் தாக்குதல் வல்லரசு நாடாக அறியப்படும் அமெரிக்காவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டிருந்தது.
இந்த கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு, அமெரிக்க வாழ் இந்தியரான பிரேம் காஞ்சிபோட்லோ கடந்த திங்கள் கிழமை முயிரிழந்தார். 66 வயதாகும் இவர் அமெரிக்காவில் 1992 முதல் அமெரிக்காவில் பத்திரிக்கையாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த மார்ச் 28இல் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த திங்களன்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இவரது இறப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியா – அமெரிக்கா நல்லுறவுக்கு சிறப்பாக பங்காற்றியவர் என பதிவிட்டு, அவரது குடும்பத்திற்கு தனது இரங்கலை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…