பெய்ரூட் துறைமுகத்தின் இன்று எண்ணெய்கள் மற்றும் டயர்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக லெபனான் ராணுவம் தெரிவித்துள்ளது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
தீயை அணைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், இராணுவ ஹெலிகாப்டர்கள் இந்த முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழப்பு பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை. தீ விபத்து நடந்த இடத்தில் ஒரு பெரிய புகை வெளியேறும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
லெபனானின் தலைநகரான பெய்ரூட் துறைமுகத்தில் ஒரு மாதத்திற்கு முன் ஒரு பெரிய வெடி விபத்து ஏற்பட்டது. ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக துறைமுகக் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வெடித்ததில் 191 பேர் உயிரிழந்தனர். 6,000 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இந்த விபத்தால் துறைமுகமும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரும் சேதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…