உரிய உரிமை பெறாத காரணத்தினால், சீன ஆப் ஸ்டோரில் இருந்து 39,000 கேம்ஸ் உட்பட 46,000 செயலிகளை ஆப்பிள் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் சீன ஆப் ஸ்டோரில் சீனாவின் ஆப் ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து டெவலப்பர்கள் முறையான உரிமை பெறாத காரணமாக 46,000 செயலிகளை ஆப்பிள் தனது ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது. மேலும், டெவலப்பர்கள் முறையான உரிமம் பெற ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே காலக்கெடு விதித்திருந்த நிலையில், தற்பொழுது நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நீக்கப்பட்ட 46,000 செயலிகளில் 39,000 செயலிகள் கேம்கள் ஆகும். அதுமட்டுமின்றி, இது ஆப்பிள் வரலாற்றில் ஒரே நாளில் அதிகளவு செயலிகள் நீக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. இதுகுறித்து கிமாய் ஆராய்ச்சி நிறுவனத்தின் கருத்துப்படி, தடைசெய்யப்பட்ட கேம்ஸில் Ubisoft-ன் NBA2K20 மற்றும் Assassin’s Creed Identity ஆகிய பிரபல கேம்கள் அடங்கும் எனவும், இதில் 1,500 கட்டணம் செலுத்தும் ஆப்களில் வரும் 74 ஆப்கள் மட்டுமே தப்பித்துள்ளது. அதற்கு காரணம், அது ஆப்பிள் நிறுவனத்தின் கோள்கைகளை ஒப்புக்கொண்டு அதன்படி செயல்படுவதே ஆகும்.
இஸ்ரேல் : ஈரான்-இஸ்ரேல் பதட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் தீவிரப்படுத்தி வருகிறது. முன்னதாக,…
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…