போர் மண்டலத்திற்கு வெளியே உள்ள நகரங்களை ஆர்மீனியா குறிவைத்து தாக்குவதாக அஜர்பைஜான் குற்றம்சாட்டியுள்ளது.
நகோர்னோ-கராபத் பகுதிகளை 1994 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் அர்மீனியா கைப்பற்றியது. மேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரமும் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனியா ஆதரவு மக்கள் வசித்து வந்தனர். அதற்கான உதவிகளை அர்மீனியா நாட்டு அரசு செய்துவந்தது.
அசர்பைஜான் ராணுவத்தினர், நகோர்னோ-கராபத் பகுதிகளில் கடந்த 27 ஆம் தேதி திடீரென தாக்குதல் நடத்தினார்கள். அந்த தாக்குதலுக்கு பதிலடியாக நகோர்னோ-கராபத் மாகாணத்தில் உள்ள அர்மீனிய ஆதரவு படையினரும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
தற்பொழுது அந்த மோதல், போராக மாறிய நிலையில், பயங்கர ஆயுதங்களை கொண்டு இருதரப்பும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த போரில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை நிறுத்த இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே வருகிறது.
இந்நிலையில், அசர்பைஜான் நாட்டின் இரண்டாம் பெரிய நகரமான கஞ்சா மற்றும் மிஞ்சசேவியர் பகுதிகளில் அர்மீனியா ராணுவத்தினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாக அசர்பைஜான் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அந்த பகுதிகள், போர் மண்டலத்திற்கு வெளியே உள்ள நகரங்கள் என விளக்கமளித்துள்ளது. தாங்கள் எந்தவிதமான தாக்குதல் நடத்தவில்லை என அர்மீனியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…