ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 80 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகள் 2015 ஆம் ஆண்டு முதல் நடத்திய தாக்குதலில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பொதுமக்களை அழைத்து சென்ற ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் பலர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை இந்த தாக்குதலில் 59 பொதுமக்கள் 6 அரசு சார் போராளிகள் மற்றும் 15 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக உயிரிழப்பு 80 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மருத்துவமனைகளிலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…