ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் 80 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவில் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த பயங்கரவாதிகள் 2015 ஆம் ஆண்டு முதல் நடத்திய தாக்குதலில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை நாட்டில் ஏற்பட்ட வன்முறை காரணமாக 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பொதுமக்களை அழைத்து சென்ற ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. இந்த மோதலில் பலர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை இந்த தாக்குதலில் 59 பொதுமக்கள் 6 அரசு சார் போராளிகள் மற்றும் 15 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக உயிரிழப்பு 80 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மருத்துவமனைகளிலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…
சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…