அமெரிக்காவின் பேஸ்பால் மைதானத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு;4 பேர் காயம்.!

Published by
Edison

அமெரிக்காவின் பேஸ்பால் மைதானத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்ததில் சுமார் 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொடூரமான துப்பாக்கி வன்முறையின் நீண்ட மற்றும் வேதனையான வரலாற்றை அமெரிக்கா கொண்டுள்ளது.காரணம்,பள்ளிகள், பணியிடங்கள் மற்றும் ஷாப்பிங் மையங்களை குறிவைத்து அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது.

அந்த வகையில்,அமெரிக்க தலைநகரில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் நிறைந்த வாஷிங்டன் நேஷனல்ஸ் மற்றும் சான் டியாகோ பேட்ரெஸ் இடையேயான பேஸ்பால் ஆட்டத்தின் போது,மைதானத்திற்கு வெளியே சனிக்கிழமையன்று நான்கு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் வெளியேற்றப்பட்டு போட்டி திடீரென நிறுத்தப்பட்டது.

இதனையடுத்து,விளையாட்டு போட்டியின்போது இருந்த ஏ.எஃப்.பி பத்திரிகையாளர்கள் கூறியதாவது:”சில பார்வையாளர்கள் அரங்கத்திற்கு வெளியே துப்பாக்கிச் சத்தங்களைக் கேட்டபின் வெளியேறினர்.மற்றவர்கள் போட்டி அறிவிப்பாளரின் ஆரம்ப வற்புறுத்தலின் பேரில் தங்கள் இருக்கைகளில் தங்கியிருந்தனர்”, என்று கூறினார்.

இதற்கிடையில்,சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட விளையாட்டின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களில் அரங்கத்தில் துப்பாக்கிச் சூட்டின் சத்தங்கள் தெளிவாகக் கேட்கப்பட்டன.

ஆனால்,இது தொடர்பாக போலீசார் கூறுகையில்:”தெற்கு வாஷிங்டன் டி.சி.யின் கடற்படை யார்டு பகுதியில் நேஷனல்ஸ் பூங்காவிற்கு வெளியே இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.மேலும்,இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க பகுதி மருத்துவமனைகளுக்குச் சென்றனர்.

இது தற்போது ஒரு செயலில் உள்ள விசாரணையாகும், மேலும் தற்போது எந்த அச்சுறுத்தலும் இல்லை என தோன்றுகிறது”,என்று தெரிவித்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து,துப்பாக்கிச் சூடு நடந்த மூன்றாம் பேஸ் கேட் சந்திக்கும் இடத்தில் போலீசார் சீல் வைத்தனர்.

இந்த ஆண்டு வாஷிங்டனில் 100 க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்துள்ளன, அவற்றில் பல துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் : 58 ஆண்டுகள்.., வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த இந்தியா.!

பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…

10 minutes ago

அரோகரா.. அரோகரா.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது மகா கும்பாபிஷேகம்..!

தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…

31 minutes ago

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

13 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

13 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

15 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

15 hours ago