1 வயசு ஆகாத குழந்தைக்கு இந்த மாதிரி உணவுகளை கொடுப்பதை தவிர்க்கவும்.!

Published by
கெளதம்

ஒரு வயது ஆகாமல் எந்த உணவுகளை குழந்தைக்கு கொடுக்கக்கூடாது என சில உணவுகளின் பட்டியல் காண்போம்.

புதுசா பெற்றோரான பலருக்கு குழந்தையைப் பார்த்துக்கொள்வது என்பது கொஞ்சம் பெரிய சவாலாகத்தான் இருக்கும். அதிலும் தனிக் குடும்பத்தில் இருந்தால் அது இன்னும் கடினமான ஒன்றாக இருக்க கூடும் . குழந்தைப் பராமரிப்பு அவ்வளவு சின்ன விஷயம் இல்ல. அதுவும் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவுகள் என்று வரும் போது, பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் வரும் தானே.

எப்போதும் குழந்தை பிறந்து ஆறு மாதம் வரை தாய்ப்பால் தவிர எந்த ஒரு உணவையும் கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் சொல்லுவார்கள். 6 மாதம் ஆன பிறகு குழந்தைக்கு புதிய உணவுகளை பழக்கப்படுத்துவது பல பெற்றோர்கள் மிகவும் ஆர்வமுடன் இருப்பார்கள்.

ஆனால் எல்லா உணவுகளையும் குழந்தைக்கு கொடுக்க முடியாது. குழந்தைக்கு புதிய உணவுகளை பழக்கப்படுத்த தொடங்கும் போது என்னென்ன உணவுகளைக் கொடுக்க வேண்டும் எதை கொடுக்கக்கூடாது என்பதை அறிந்த பின்னரே கொடுக்க வேண்டும்.

தேன் மருத்துவ குணம் நிறைந்த ஆரோக்கியமான உணவுப் பொருள் ஆகும். இருந்தாலும் அதில் பாக்டீரியாவான குளோஸ்ட்ரிடியம் போட்லினம் இருக்க வாய்ப்புக்கள் இருக்கிறதாம். இது போட்லினம் என்ற நச்சுத்தன்மையை உருவாக்குகிறதாம். இந்த நச்சுத்தன்மை என்ன செஇகிறது எனறால் குழந்தைக்கு சோம்பலை உண்டாக்கும்.

சத்துக்கள் உறிஞ்சுவதை பலவீனப்படுத்தும், தசைகளை பலவீனப்படுத்தும் மற்றும் குழந்தைக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும். மேலும் எந்நேரமும் குழந்தை எரிச்சலுணர்வையும், தலைச்சுற்றல் அறிகுறிகளுடனும் இருக்கும். இது ஒரு அரிய நோய்த்தொற்று தான். ஆனால் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே முதல் பிறந்தநாள் வரை உங்கள் குழந்தைக்கு தேன் கொடுப்பதைத் தவிர்த்திடுங்கள்.

பசும்பால் குழந்தைக்குஒரு வயது ஆகும் வரை தாய்ப்பாலைத் தவறாமல் கொடுங்கள். ஏனெனில் ஒரு வயதிற்குள் இருக்கும் குழந்தையால் மாட்டுப் பாலில் உள்ள புரோட்டீன்கள் மற்றும் நொதிப் பொருட்களால் செரிமானம் செய்ய இயலாது.

வேர்க்கடலை ஆரோக்கியமானதாக மற்றும் புரோட்டீன் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருள். ஆனால் வேர்க்கடலை சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துமாம். எனவே வேர்க்கடலையை குழந்தைக்கு கொடுக்க நினைத்தால் அது ஒரு வயது ஆகாமல் கொடுக்காம இருப்பது நல்லது.

கடல் உணவுகளில் முக்கியமாக இறால், நண்டு போன்றவை குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்.உங்கள் குழந்தைக்கு கடல் உணவுகளைக் கொடுக்க நினைச்சீங்கனா ஒரு வயதிற்கு மேல் கொடுக்க தொடங்குங்கள் சில மீன்கள் சுறா மற்றும் கானாங்கெளுத்தி போன்றவற்றில் மெர்குரி அதிகம் உள்ளது. மெர்குரி அதிகம் உள்ள எந்த உணவுகளையும் குழந்தைக்கு கொடுக்க வேணாம்

Published by
கெளதம்

Recent Posts

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…

16 minutes ago

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

52 minutes ago

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

1 hour ago

விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி! மத்திய அரசு எடுத்த முடிவு!

டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…

2 hours ago

“விலங்குகள் தாக்குவது இயல்பு”…அலட்சியமாக பதில் சொன்ன ராஜகண்ணப்பன்.. எழுந்த கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…

2 hours ago

”ரயில் கட்டணம் படிப்படியாக உயர்த்தப்படும்” – ரயில்வே துறை இணை அமைச்சர்.!

சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…

3 hours ago