கனடாவில் பிரதமர் மோடிக்கு வைக்கப்பட்ட பேனர்…! என்ன காரணம்…?

Published by
லீனா

கனடாவுக்கு  கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதை அடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டிற்கும் மேலாக, கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்த வைரசை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில், இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அவசரகாலத் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதன்படி  இந்தியாவில்,தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து, இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் இந்திய மக்களுக்கு மட்டுமல்லாது, வெளி நாட்டு மக்களுக்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்டை நாடுகளான, இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவுகள், பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ஜமைக்கா உள்ளிட்ட  ஆப்பிரிக்க நாடுகளுக்கும் தடுப்பூசிகள் தேவையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கனடாவுக்கு  கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதை அடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அந்நாட்டு இந்து அமைப்புகள் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து, கிரேட்டர் டொரண்டா என்ற சாலையில் பெயர் பலகைகள் வைத்துள்ளனர். மேலும் அந்த பெயர் பலகையில், இந்தியா மற்றும் கனடாவின் அன்புறவு நீடிக்க வேண்டும் என்றும் அச்சிடப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

1 hour ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

2 hours ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

3 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

4 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

5 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

6 hours ago