ஜோ பைடன் அதிபரானால், அமெரிக்காவில் ஆண்டுதோறும் 4 லட்சம் டாலர்களுக்கும் அதிகமாக சம்பாதிப்பவர்கள் மீது வருமான வரியை உயர்த்தப்போவதாக தெரிவித்தார்.
அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. ஆனால் கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகம். இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 85 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. அந்தவகையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனின் உடல் வலிமை, ஆரோக்கியம் அதிபர் டிரம்ப் கேள்வியெழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பைடன், 70 வயதுக்கு மேலானவர்கள் பற்றி இப்படி கேள்வி எழுப்புவது நியாயம் தான் எனக் கூறினார். மேலும், அங்குள்ள செய்தியாளர் ஒருவர், “அமெரிக்க அதிபரின் பதவி காலம் நான்கு ஆண்டுகள் என்பதால் ஒரு முறை மட்டுமே அதிபராக இருப்பீர்களா” என கேட்டார்.
அதற்கு பதிலளித்த அவர் “அடுத்த தேர்தலிலும் போட்டியிட்டு 8 ஆண்டுகள் அதிபராக பணியாற்றுவேன் என கூறிய அவர், நான் அதிபரானால் ஆண்டுதோறும் 4 லட்சம் டாலர்களுக்கும் அதிகமாக சம்பாதிப்பவர்கள் மீது வருமான வரியை உயர்த்தப்போவதாக தெரிவித்தார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…