கனடாவிலுள்ள, பிராண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், தேனீ வளர்ப்போருக்கு சவாலாக இருக்கும் மெழுகுப் புழுக்கள் குறித்து ஆராய்ந்தபோது ஒரு புதிய அற்புதம் தெரியவந்தது. மெழுகுப் புழுக்களின் வயிற்றிலுள்ள சில கிருமிகள் பிளாஸ்டிக்கை எளிதில் செறித்து, ஆல்கஹாலாக மாற்றித்தரும் திறனைக் கொண்டிருந்தன.
எனவே, இந்த கிருமிகளை தனியே எடுத்து ஆராய்ந்தனர். ஆனால், புழுக்களின் வயிற்றில் இருக்கும்போது அக் கிருமிகள் பிளாஸ்டிக்கை சிதைத்த வேகத்தைவிட, தனியே ஆய்வகத்தில் செறிமானம் செய்த வேகம் குறைவாக இருந்தது. இதனால், புழுக்களின் வயிற்றில் அக் கிருமிகளுக்கு பிளாஸ்டிக்கை வேகமாக செறிமானம் செய்ய ஊக்கம் கிடைப்பதால், மெழுகுப் புழுக்களையே பயன்படுத்திப் பார்த்தனர்.
புழுக்களுக்கும், ஆய்வகத்தில் பிளாஸ்டிக்கை கொடுத்து, பெருமளவில் பிளாஸ்டிக் குப்பையை ஆல்கஹாலாக மாற்ற முடியும் என, பிராண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே, ஆய்வுகள் தொடர்கின்றன. இந்த செய்தி உலக அளவில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் பெருகி வரும் பிளாஸ்டிக் பொருளை என்ன செய்வது என தெரியாமல் விழிபிதுங்கி வரும் நிலையில் இந்த கண்டுபிடிப்பு வருங்கால மணிதர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…