தாராபுரம் தனித் தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகன்,தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழி பின்னடைவு சந்தித்துள்ளார்.
தமிழகம்,புதுச்சேரி,கேரளா,மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணும் பணியானது இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.
தமிழகத்தில்,முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அதன்பின்னர் காலை 8.30 மணியிலிருந்து மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்,தாராபுரம் தனித் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எல்.முருகன்,வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் 797 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வகிக்கிறார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கயல்விழி பின்னடைவு சந்தித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றில் பாஜக வேட்பாளர் எல்.முருகன் 4,218 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.திமுக வேட்பாளரான கயல்விழி செல்வராஜ் 3,421 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
கேரளா : மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதிகளில் இன்று (ஜூன்…
சென்னை : நடிகை மீனாவுக்கு தமிழக பாஜக மூலம் முக்கிய பதவி வழங்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…