கொரோனாவால் உயிரிழந்த சிறுபான்மையினர்களையும் அவர்களின் மத சடங்கு எதிராக எரிக்கும் இலங்கை அரசை பாகிஸ்தான் பிரதமர் கண்டித்ததை அடுத்து தங்கள் முடிவை இலங்கை அரசு மாற்றிக்கொண்டுள்ளது.
பொதுவாக இந்துக்கள் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிப்பதும், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம் மதத்தினர் எரிக்காமல் புதைப்பது தான் அவர்களின் மத வழக்கம். ஆனால் கொரோனவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மண்ணுக்குள் புதைப்பதால் அது நிலத்தடி நீரில் கலந்து தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் சிலர் கூறியதை அடுத்து இலங்கையில் கொரோனவால் உயிரிழக்கும் அனைவரையுமே எரிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறுபான்மையினராகிய கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் மத வழக்கத்திற்கு இது எதிரானதாக இருப்பதாக பல வகையில் அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேலும், இதற்கு ஐநா மனித உரிமை ஆணையமும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இதனை அடுத்து இலங்கைக்கு சுற்றுப் பயணமாக சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்கள், இதுகுறித்து இலங்கை அரசிடம் பேசி உள்ளார். அப்பொழுது சிறுபான்மை மக்களின் மத நம்பிக்கைகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் எனவும், சடலம் எரிக்கப்படுவது இஸ்லாம் மதம் ஏற்கவில்லை எனவும் இலங்கை அரசிடம் வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில் கடந்த 10 மாதங்களாக பின்பற்றி வந்த தங்களின் நடைமுறையை மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பான சட்டத்தையும் தற்பொழுது மாற்றியுள்ளது.
சவூதி : உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி ப்ரோ லீக் அணியான அல் நசார் கால்பந்து…
சென்னை : 2026-ல்தமிழகத்தில் நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும், அதில் பாஜகவும் அங்கம் வகிக்கும் என அமித்…
சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற ஜூலை 4ம் தேதி…
லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…
திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…