கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் எரிப்பு – பாகிஸ்தான் பிரதமர் கண்டனத்திற்கு பணிந்த இலங்கை!

Published by
Rebekal

கொரோனாவால் உயிரிழந்த சிறுபான்மையினர்களையும் அவர்களின் மத சடங்கு எதிராக எரிக்கும் இலங்கை அரசை பாகிஸ்தான் பிரதமர் கண்டித்ததை அடுத்து தங்கள் முடிவை இலங்கை அரசு மாற்றிக்கொண்டுள்ளது.

பொதுவாக இந்துக்கள் உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிப்பதும், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம் மதத்தினர் எரிக்காமல் புதைப்பது தான் அவர்களின் மத வழக்கம். ஆனால் கொரோனவால் உயிரிழந்தவர்களின் உடல்களை மண்ணுக்குள் புதைப்பதால் அது நிலத்தடி நீரில் கலந்து தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் சிலர் கூறியதை அடுத்து இலங்கையில் கொரோனவால் உயிரிழக்கும் அனைவரையுமே எரிக்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிறுபான்மையினராகிய கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களின் மத வழக்கத்திற்கு இது எதிரானதாக இருப்பதாக பல வகையில் அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

மேலும், இதற்கு ஐநா மனித உரிமை ஆணையமும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இதனை அடுத்து இலங்கைக்கு சுற்றுப் பயணமாக சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்கள், இதுகுறித்து இலங்கை அரசிடம் பேசி உள்ளார். அப்பொழுது சிறுபான்மை மக்களின் மத நம்பிக்கைகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் எனவும், சடலம் எரிக்கப்படுவது இஸ்லாம் மதம் ஏற்கவில்லை எனவும் இலங்கை அரசிடம் வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில் கடந்த 10 மாதங்களாக பின்பற்றி வந்த தங்களின் நடைமுறையை மாற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பான சட்டத்தையும் தற்பொழுது மாற்றியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

10 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago